Thursday, August 14, 2008

தீயாக நீ

தீ சுடுமென யாரோ சொல்ல
தீண்டினேன் உனை
தீ சுடுவதோடு
சிலிர்க்கவும் செய்கிறது
நல்லவேளை ஆதிகாலத்தில்
நீயில்லை- தீயின் தன்மை
நிமிடத்துக்கு நிமிடம் மாறுமென
இன்று நான் படித்துக்கொண்டிருப்பேன்

தீயின் தன்மை எரிப்பதாம்
எதனையும் எரிக்காதா தீ-நீ
தீ தீண்டி எரிந்திருப்போர் பலரிருக்க
எரியாமல் நான்
தீயின் மேல் நீர்த்துளிகள்
உன்மேல் பூத்திருக்கும்
வியர்வைத்துளிகள்
பார்வைக்கு கண்கள் மட்டும்தான்
தீயாகத்தெரிகிறது-தீண்டினால்
உடலெங்கும் தீயாய்ச்சுடுகிறது
உள்ளம் உருகிப்போகிறேன்
உன்னைப்பார்க்கும் போதெல்லாம்
நானும் மெழுகுதானோ??

28 பதிலகள்:

ஜியா said...

thala.. kavuja semaiya kalakareenga???

Innum neraya unga kitta irunthu ethir paaka vatchitteenga... ;)))

இவன் said...

//thala.. kavuja semaiya kalakareenga???

Innum neraya unga kitta irunthu ethir paaka vatchitteenga... ;)))//

என்னது இன்னும் எதிர் பார்க்க வைச்சிட்டேனா?? அவ்வளவுதான்.... நானே classல பொழுது போகாம சும்மா கிறுக்கி வைச்சிருக்கேன் அதுக்கு ஏன்ய்யா இந்த கொலைவெறி??

Selva Kumar said...

இவனே..

கன்றாவி..கவிஜ..கவிதை

என்று உங்கள் முன்னேற்றம் எழுத்தில் தெரிகிறது..


உண்மையிலேயே நான் நான்கு முறை என்னையே கிள்ளி பார்த்த பின்தான் அது இவன் பதிவு என்பதையே நம்பினேன்.

Selva Kumar said...

Comments எங்கியோ சைடுல வருதே ??

நான் கீழ போய் Commentsஐ கிளிக் பண்ணீட்டு வெய்ட் பண்ணி பாத்தேன்.

ஒரு 10 தடவ இருக்கும் :((

அதுக்கப்புறம்தான் இதை இங்கே கண்டுபிடித்தேன்..

Selva Kumar said...

இது வரை வந்ததில் இதுதான் பெஸ்ட்..

தொடர்ந்து எழுதவும்..

இவன் said...

//இவனே..

கன்றாவி..கவிஜ..கவிதை

என்று உங்கள் முன்னேற்றம் எழுத்தில் தெரிகிறது..


உண்மையிலேயே நான் நான்கு முறை என்னையே கிள்ளி பார்த்த பின்தான் அது இவன் பதிவு என்பதையே நம்பினேன்.//


ஆஹா ஆஹா நன்றி நன்றி
இதில ஏதும் உள்குத்து இல்லையே??

இவன் said...

//இது வரை வந்ததில் இதுதான் பெஸ்ட்..

தொடர்ந்து எழுதவும்..//


என்னது இதுதான் பெஸ்ட்டா?? என்ன இருந்தாலும் இப்படி ஒரு வில்லத்தனம் இருக்க கூடாது

இவன் said...

//Comments எங்கியோ சைடுல வருதே ??

நான் கீழ போய் Commentsஐ கிளிக் பண்ணீட்டு வெய்ட் பண்ணி பாத்தேன்.

ஒரு 10 தடவ இருக்கும் :((

அதுக்கப்புறம்தான் இதை இங்கே கண்டுபிடித்தேன்..//


நேற்று வேற எதையோ முயற்சி செய்யப்போய் இப்படி ஆகிடிச்சு... இப்பத்தான் ஒருமாதிரி fix பண்ணினேன்

கயல்விழி said...

கவிஞர் இவன் வாழ்க!

இவன் said...

//கவிஞர் இவன் வாழ்க!//

ஆகா ஏன் ஏன் இந்த கொலைவெறி?? இருந்தாலும் நன்றி நன்றி

Divya said...

அருமை ....மிக மிக அருமை!!

கலக்கிட்டீங்க இவன்,தொடர்ந்து பல கவிதைகள் எழுத வாழ்த்துக்கள்!!

இவன் said...

//அருமை ....மிக மிக அருமை!!

கலக்கிட்டீங்க இவன்,தொடர்ந்து பல கவிதைகள் எழுத வாழ்த்துக்கள்!!//


நன்றி திவ்யா நன்றி... இது சும்மா கிறுக்கினதுதான் அடுத்து கொஞ்சமாவது நல்லா எழுதப்பார்க்கிறேன்

PK said...

இவன்,

நான் ச்சோ ஸ்வீட் என்று சொன்னால், சக்கரை வியாதி வரும் னு சொல்லுவீங்க.. அதுனாலே, " ஏதோ இருக்கு கவிதை" என்று சொல்லி முடிக்கிறேன் :)

அன்புடன்,
புனித்

Unknown said...

Mmm nalla irukke unga kavithaigal..!! :-)

இவன் said...

//இவன்,

நான் ச்சோ ஸ்வீட் என்று சொன்னால், சக்கரை வியாதி வரும் னு சொல்லுவீங்க.. அதுனாலே, " ஏதோ இருக்கு கவிதை" என்று சொல்லி முடிக்கிறேன் :)

அன்புடன்,
புனித்//


நன்றி நன்றி

இவன் said...

//Mmm nalla irukke unga kavithaigal..!! :-)//

முதல் முறை வந்திருக்கீங்க... வாங்க வாங்க நன்றி நன்றி

MSK / Saravana said...

"தித்திக்கும் தீ" என்று ஒரு பாடலில் வரும்.. அதை நினைவுபடுத்தி இருக்கிறீர்கள்..

நல்ல கவிதைகள்..

தொடர்ந்து எழுதுங்கள்..

Punith said...

எப்போவும் எல்லாரையும் எதாச்சும் கிண்டல் பண்ணிட்டே இருப்பிங்க.. எப்போ எனக்கு மட்டும் ஏன் "நன்றி நன்றி"? நான் உங்கள என் கமெண்ட் வைத்து மடக்கி விட்டனா??? :D

புனித்

இவன் said...

//"தித்திக்கும் தீ" என்று ஒரு பாடலில் வரும்.. அதை நினைவுபடுத்தி இருக்கிறீர்கள்..

நல்ல கவிதைகள்..

தொடர்ந்து எழுதுங்கள்..//


முதல் முதலாக வந்திருக்கிறீர்கள்
நன்றி சரவணகுமார்.... இன்னும் நன்றாக எழுத முயற்சி செய்கிறேன்...

இவன் said...

//எப்போவும் எல்லாரையும் எதாச்சும் கிண்டல் பண்ணிட்டே இருப்பிங்க.. எப்போ எனக்கு மட்டும் ஏன் "நன்றி நன்றி"? நான் உங்கள என் கமெண்ட் வைத்து மடக்கி விட்டனா??? :D//

ஆஹா புனித் நானே சும்மா இருந்தாலும் நீங்க விட மாட்டீங்களா... தோ எழுந்திட்டேன் தோ வாரேன்... ஆங் முதல்ல என்ன பின்னுட்டம் அது??

////இவன்,

நான் ச்சோ ஸ்வீட் என்று சொன்னால், சக்கரை வியாதி வரும் னு சொல்லுவீங்க.. அதுனாலே, " ஏதோ இருக்கு கவிதை" என்று சொல்லி முடிக்கிறேன் :)

அன்புடன்,
புனித்//


ஆங் அப்படி வாயை அடக்கினாத்தான் சக்கரை வியாதி குறையும்... அப்படியே வாயை அடக்க try பண்ணுங்க கொஞ்ச நாள்ல சக்கரை வியாதி சரியாயிடும்

PK said...

ஆங் அப்படி வாயை அடக்கினாத்தான் சக்கரை வியாதி குறையும்... அப்படியே வாயை அடக்க try பண்ணுங்க கொஞ்ச நாள்ல சக்கரை வியாதி சரியாயிடும்

சமாளிப்பு.. சமாளிப்பு.. சமாளிப்பு!!! :D

இவன் said...

//புனித் கைலாஷ் said...

சமாளிப்பு.. சமாளிப்பு.. சமாளிப்பு!!! :D//


வேற வழி சமாளிச்சுத்தானே ஆக வேண்டி இருக்குது.... ஹி ஹி ஹி அரசியல்ல இதெல்லாம் சகஜம் புனித்

புதுகை.அப்துல்லா said...

தீயின் மேல் நீர்த்துளிகள்
உன்மேல் பூத்திருக்கும்
வியர்வைத்துளிகள்
//

அண்ணே! உங்களை இதுவரை உங்களை என்னைப் போல் ஓரு மொக்கைச்சாமி என தவறாக நினைத்துவிட்டேன்.இந்த வரிகளுக்குப்பின் மாற்றிக் கொண்டேன். தயவு செய்து என்னை மன்னிக்கவும்.

இவன் said...

//அண்ணே! உங்களை இதுவரை உங்களை என்னைப் போல் ஓரு மொக்கைச்சாமி என தவறாக நினைத்துவிட்டேன்.இந்த வரிகளுக்குப்பின் மாற்றிக் கொண்டேன். தயவு செய்து என்னை மன்னிக்கவும்.//

அடடா நீங்க சரியாத்தான் நினைச்சிருக்கீங்க....

மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தைங்க அப்துல்லா.

PK said...

//தீயின் தன்மை
நிமிடத்துக்கு நிமிடம் மாறுமென
இன்று நான் படித்துக்கொண்டிருப்பேன்//

இவளோ காசு குடுத்து, 'படி' ன்னு உங்கள ஆஸ்திரேலியா வரைக்கும் அனுப்பி வச்சு இருக்காங்க.. நீங்க "ஹே! அழகிய தீயே" ன்னு பாட்டு பாடிட்டு ..... ஐயோ! ஐயோ!

இவன் said...

//இவளோ காசு குடுத்து, 'படி' ன்னு உங்கள ஆஸ்திரேலியா வரைக்கும் அனுப்பி வச்சு இருக்காங்க.. நீங்க "ஹே! அழகிய தீயே" ன்னு பாட்டு பாடிட்டு ..... ஐயோ! ஐயோ!//

பாட்டு எல்லாம் எழுதி ரெடியாத்தான் வச்சிருக்கேன் ஆனா யாரப்பார்த்து பாடுறது என்னுதான் தெரியல... நான் இப்படிப்பாடிக்கிட்டு அலையுறதும் அப்பாவுக்கும் அப்பாவுக்குத்தெரியும் அதனால பிரச்சனையும் இல்ல ஹி ஹி ஹி ஹி

PK said...

இப்போ என்ன, மெக் டொனல்ட்ஸ் பொண்ணை பார்த்து "ஹே! அழகிய தீயே பர்கரை வாட்டுகிறாயே!" என்று பாட வேண்டியது தான்! :)

புனித்
பின்குறிப்பு: அது எப்படி கமெண்ட்ஸ் போட்ட உடனே அப்ரூவ் ஆகுது? ஆன்லைன் லே இருப்பிங்களோ தீயை தேடி கொண்டு?? :D

இவன் said...

//இப்போ என்ன, மெக் டொனல்ட்ஸ் பொண்ணை பார்த்து "ஹே! அழகிய தீயே பர்கரை வாட்டுகிறாயே!" என்று பாட வேண்டியது தான்! :)//

பாடியும் பார்த்திட்டேன்..... அவ burgerராலேயே அடிக்க வர்ரா நான் என்ன பண்ண? அதோடா நான் தமிழ்ல பாட ஏதோ கெட்ட வார்த்தையில நான் திட்றேன் என்னு நினைச்சாளோ தெரியல...

//புனித்
பின்குறிப்பு: அது எப்படி கமெண்ட்ஸ் போட்ட உடனே அப்ரூவ் ஆகுது? ஆன்லைன் லே இருப்பிங்களோ தீயை தேடி கொண்டு?? :D//


இப்பத்தான் வேலை முடிஞ்சு வந்து... mail check செஞ்சிட்டு இனித்தான் தூங்க போறேன்.... தீயை எல்லாம் இப்படியா தேட முடியும்??