Friday, August 29, 2008

நண்பனுக்காக

கொஞ்சநாட்களுக்கு முன் என்னைப்பிரிந்த என் நண்பன் ராகவனுக்காக மனம்போன போக்கில் எழுதியது.....


தொலைந்து போன நாட்கள்
தொலையாத நினைவுகள்
மரணத்தைத்தேடிக்கொண்டு
வலிகளை எமக்குத்தந்தவனே
மரணம் கண்டு மரத்துப்போன
எங்களையும் கலங்க வைத்தவன் நீ
வளர்த்த பெரியதாயின்
மரணம் கூட கலங்கவைத்ததில்லை
என்னை-கண்ணீர் விட்டழுகிறேன்
உந்தன் பிரிவு கண்டு
ஜீரணம் அடையவில்லையடா-நீ
நேற்று ஊட்டிய உணவுகூட
எப்படி உன் பிரிவு ஜீரணித்து
கொள்ளப்போகிறேன்-கொஞ்சமாவது நினைத்தாயா?
நான் உனக்காக அழுவேன் என்று
எத்தனை சண்டைகள் பிடித்திருப்போம்
நானும் நீயும்
உங்கள் மகனுக்கு நான்
பொறுப்பு-அவன் உங்கள் மகனல்ல
என் நண்பன் என நான் கூறிய
நம் தாய்க்கு என்னடா
பதில் சொல்வேன் நான்...??
நாட்கள் தொலையட்டும்
நம் நினைவுகள் நிலைக்கட்டும்
நானும் இறந்து வருவேன் -ஒருநாள்
உனைக்காண-அன்று சொல்கிறேன்
உன்னால் உடைந்த இதயங்கள்
எத்தனை எத்தனை என்பதை


அதுவரை நினைவுடன்
ஆதவன்

10 பதிலகள்:

Divya said...

மனதை கணமாக்கியது ......ஒவ்வொரு வரிகளும்:(

புதுகை.அப்துல்லா said...

:((

MSK / Saravana said...

மனதை கணமாக்கியது.. ஒவ்வொரு வரிகளும்..

இவன் said...

நன்றி திவ்யா, அப்துல்லா மற்றும் சரவண குமார்

Unknown said...

நல்லா கவிதை எழுதறீங்க..!! வலிகள் சுமந்த வரிகள் நல்லாருக்கு..!!

Unknown said...

//இங்கே தமிழில் எழுதி பின்னுட்ட பெட்டியில் வெட்டி பின்னுட்டப்பெட்டியில் ஒட்டுங்கள்//

அண்ணா ரெண்டு முறை பின்னுட்டப்பெட்டின்னு போட்ருக்கீங்க..!!

இவன் said...

//நல்லா கவிதை எழுதறீங்க..!! வலிகள் சுமந்த வரிகள் நல்லாருக்கு..!!//

நன்றி sri

இவன் said...

//
அண்ணா ரெண்டு முறை பின்னுட்டப்பெட்டின்னு போட்ருக்கீங்க..!!//


சுட்டிக்காட்டிய்தற்கு நன்றி sri, இதோ மாற்றுகிறேன்

Anonymous said...

உங்கள் நண்பனின் நினைவுகளிள் நானும் மூழ்கிவிட்டேன்!!

மனம் வருந்துகிறேன்!!

இவன் said...

//உங்கள் நண்பனின் நினைவுகளிள் நானும் மூழ்கிவிட்டேன்!!

மனம் வருந்துகிறேன்!!//


நன்றி இனியவள்