Monday, October 13, 2008

முதலிரவு 16+

கொஞ்ச நாளா நான் பதிவே எழுதல... இப்படியே விட்டா போன மாதம் மாதிரி வெறும் 3 பதிவோட போயிடும் அதனால என் நண்பன் ஒருத்தன் எழுதின கவிதை எடுத்து சுட்டு போட்டிடலாம் என்னு முடிவு செஞ்சு இன்னைக்கு பதிவேற்றுகிறேன்... அதாவது அவன் கவிதையை சுட்டு இங்க போடுறேன்



முதலிரவு என்றதால்
நெஞ்சில் படபடப்பு;
கொஞ்சம் பரபரப்பு.


எத்தனையோ பாதிநாட்களை
படுக்கையில் கழித்த எனக்கு,
அன்று ஏனோ
அரை அவுன்ஸ் ஏக்கம்
மனதில் மகுடி வாசித்தது.


விளக்கணைத்து -இருளின்
விரல் பிடித்து ஏதோ
போருக்கு போவது போல
போர்வைக்குள் போனேன்.


சாய்ந்த மாத்திரத்திலேயே
காதுக்குள் அவள் சொன்ன
சிருங்கார மொழியும்
சிக்கன சிணுங்கலும்
புரியாமல் தலையசைத்தேன்.


ஓயாத அவள் பசிக்கு
ஓவ்வாத ஜென்மமாக
சுருண்டு விட்டேன்.


ஆனால்,
அவளோ விடவில்லை.


போர்வைக்குள் நீச்சலடித்தேன்;
கைகளோ படபடத்தன;
கால்களோ துடிதுடித்தன;
என் கை நகங்களே
என்னை பிராண்டின.


முடிந்தளவு போராட்டம்
விடிய விடிய நடந்தது.


போரின் உச்சத்தில்
போர்வையே கிழிந்தும்விட்டது.


காலையில் பார்த்தபோது
ஓரத்தில் சிறு ரத்தக்கறை.


என்னவிரசமான வர்ணனையா?


வெளிநாடொன்றில்,
நான் கழித்த முதலிரவில்,
எனையழித்த *நுளம்பின் தொல்லையை
இதற்கு மேல் எப்படி சொல்ல?


-தெய்வீகன்-


*நுளம்பு=கொசு=mosquito

6 பதிலகள்:

Anonymous said...

நுளம்பி (mosquitto) ?

durai thiyagaraj

இவன் said...

//Anonymous said...

நுளம்பி (mosquitto) ?

durai thiyagaraj
//


அதே அதே நுளம்பேதான்(நுளம்பு=கொசு=mosquito)

PK said...

இவன்!!!
என்னை மாதிரி குழந்தை எல்லாம் வலம் வர உங்க வலைத்தளத்துல இப்படி தான் A+ கவிதை எல்லாம் போடுவிங்களா? இருந்தாலும், இந்த கவிதையில வர கற்பனை கொஞ்சம் ஓவர் தான்.. ஒன்னும் மட்டும் விளங்குது... உங்க நண்பர் கல்யாணம் செய்துக்காம நுளம்பி கூடெல்லாம் கற்பனை செஞ்சுட்டு இருக்காரே! கல்யாணம் பண்ணி வச்சுடுங்க!

புனித்

இவன் said...

// புனித் கைலாஷ் said...

இவன்!!!
என்னை மாதிரி குழந்தை எல்லாம் வலம் வர உங்க வலைத்தளத்துல இப்படி தான் A+ கவிதை எல்லாம் போடுவிங்களா? இருந்தாலும், இந்த கவிதையில வர கற்பனை கொஞ்சம் ஓவர் தான்.. ஒன்னும் மட்டும் விளங்குது... உங்க நண்பர் கல்யாணம் செய்துக்காம நுளம்பி கூடெல்லாம் கற்பனை செஞ்சுட்டு இருக்காரே! கல்யாணம் பண்ணி வச்சுடுங்க!

புனித்//


அவருக்கு கல்யாணம் ஆகல எங்கிறது உங்களுக்கு எப்படித்தெரியும் புனித்??

Anonymous said...

அட பாவிகளா வெறும் நுளம்பா?நான் என்னவோ எதோ என்று நினைச்சிட்டன்... hmm keep it up. under 16nuku kuda நுளம்பு kadikum!!

இவன் said...

// Tamilselvan said...

அட பாவிகளா வெறும் நுளம்பா?நான் என்னவோ எதோ என்று நினைச்சிட்டன்... hmm keep it up. under 16nuku kuda நுளம்பு kadikum!!//


நுளம்பேதான் தமிழ்ச்செல்வன்... முதல் வருகைக்கு நன்றி