Monday, December 8, 2008

ஆஸ்திரேலியா என் கனவு தேசம்......-1

வணக்கம் நண்பரகளே... கொஞ்ச நாளா என் தொல்லை இல்லாம இருந்திருப்பீங்க... ஆனா இப்போ மறுபடியும் ஆரம்பிச்சிட்டேன்... ரொம்ப நாளா வருண் மற்றும் கயல்விழி எழுதுவது (காதல் கல்வெட்டு) போல் ஒரு தொடர் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் ஆனால் அதிகமா flight தள்ளுறவேலை இருந்ததால(இது புரியாத்வர்கள் இந்த லிங்கில் போல் பார்க்கவும் - http://manathoodu.blogspot.com/2008/08/blog-post_26.html)) பதிவு எழுதவே முடியல வேலைவில இருக்க நேரம் இந்த பதிவு நினைப்பிலேயே போய் flightஐ மோதி அதன் indicator, மற்றும் propellerஐ உடைத்த சம்பவங்களும் உண்டு... அதைப்பற்றி பிறகு விபரமா இன்னொரு பதிவில சொல்லுறேன்.... இப்போ இந்த பதிவுக்கு வர்ரேன்....


இந்த பதிவில்(தொடரில்) நான் எழுதப்போவது இந்த ஆஸ்திரேலியா எனக்கு கனவு தேசமானது என்பதைப்பற்றியும் அதை நான் நிறைவேற்றிக்கொண்டேன் என்பதைப்பற்றியும்.... எல்லா மகன்கள் மாதிரியே எனக்கும் என் அப்பாதான் ஹீரோ என்றைக்கும் எப்பவும் அவர்தான் எனக்கு ஹீரோ... நான் 5ம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்த போது நாங்கள் வசித்த ஊரின் பெயர் தலவாக்கொலை. எனது school vice principalஆக இருந்த அப்பாவுக்கு கல்விப்பணிப்பாளராக பதவி உயர்வு. இந்த பதவி உயர்வும் கயாஸ் தியரியாய் மாறி என் கனவுக்கு வித்திட்ட ஒன்றாக இருக்கலாம்... அந்த நேரத்தில் ரண்பிம றோயல் கல்லூரி என்ற schoolக்கு தேர்வு பரிட்சை எழுத என்னை அம்மா கண்டி நகருக்கு அழைத்து போனார். அது ஆண்கள் பாடசாலை என்பதால் நானும் எனது நண்பர்களும் பரிட்சை எழுதப்போய் எனது பாடசாலையில் நான் மட்டும் தெரிவானேன். அந்த நேரத்தில் நான் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் ஏற்கனவே மாவட்ட ரீதியில் முதல் மாணவனாக வந்திருந்த காரணத்தால் அம்மாவுக்கு என்னை வேறு ஒரு பாடசாலையில் சேர்த்து நான் படிப்பில் இன்னும் அதிகமாக முன்னேற வேண்டுமென ஆசை, அப்பாவுக்கும்தான் ஆனாலும் அவருக்கு என்னை வேறு பாடசாலைக்கு அனுப்புவதில் விருப்பமில்லை.

1996 மார்ச் மாதம் புது பாடசாலை புது நண்பர்கள் hostel வாழ்க்கை என புது வாழ்க்கை ஆரம்பம். முதல் நாள் அப்பா என்னை கூட்டி வந்து hostelலில் விட்டு திரும்ப வீட்டுக்கு அதாவது தலவாக்கொலை செல்லும் போது என் அப்பா என்னை விட்டு அதிக தூரம் விலகிப்போவது போல் இருந்தாலும் மனதளவில் அருகில் மிக அருகிலேயே இருந்தார். வாரத்தில் 5 நாள் வேலை இருந்தாலும் சனிக்கிழமையானால் அதிகாலை 3 மணிக்கு எழுந்து hostelக்கு வந்து எனது உடைகளை துவைத்து தருவது போன்று ஒவ்வொரு சிறு சிறு விடயங்களையும் பார்த்து பார்த்து செய்தவர் என் அப்பா. 
 அது ‘96 செப்டெம்பர் மாத ஆரம்பம் என் அப்பா எங்கள் எல்லோரையும் விட்டு முதன்முதலில் கடல் கடந்து வேறு வழியின்றி பிரிந்து செல்லப்போகும் மாதம். ஆஸ்திரேலியா என்னுடன் கிரிக்கட் தாண்டி உறவினை வலுப்படுத்திக்கொள்ள இந்த முதல் பிரிவு வழி அமைத்துக்கொடுத்தது.....


தேசக்கனவுகள் தொடரும்

Tuesday, November 11, 2008

காதல் வாழட்டும் காதலரும் வாழட்டும்


புரையேறி மீண்டும்
இறங்குகிறது விஷமாய்-நீ
என்றோ ஊட்டிய
உணவு....


உணவகத்தில்
எவன் காதலியோ
அவனுக்கு உணவு
ஊட்டுவதை 
தூரத்தில்
காணும் போது...



காதல் வாழட்டும்
காதலரும் வாழட்டும்-என்
கண்கானா தூரத்தில் 

மட்டும்....

Monday, October 27, 2008

உறவுகளுக்காக........(ஈழம்)

உறவுகள் அழியும் நேரம்
உணர்வின்றி நாமிருந்தால்
உடமைகள் மட்டுமன்றி
உயிர்களும் தொலைந்து போகும்
உலகமோ பாராமுகமாய்
நம் உறவுமோ
உலர்ந்த நிலையாய்-அங்கு
உயிர்களும் அழிந்து போகும்
உரத்து நாம் குரல் கொடுப்போம்
இன்றேல் - நம்
இனத்தினை நாமே
இன்று அழித்திட்டோம் என்று
நாளை சரித்திரம்
சான்று கூறும்......

முத்தம்



சோர்ந்திருக்கும் போது
ஆயிரம் யானை
பலம் தருகிறதடி...!!
கைபேசி வழியே
நீ தந்த
முத்தம்...!!


RED BULL
நிறுவன
சொந்தக்காரி
நீயோ....??

Friday, October 24, 2008

பாபாவுக்கு ஒரு "ஓ" பொலிஸ்காரருக்கு ஒரு "ஓ"

என்னை சினிமாத்தொடருக்கு அழைத்த வீரத்தளபதி அகில உலக நாயகன் J.K.ரித்தீஷ் ரசிகர் மன்றத்தலைவி ராப் அவர்களுக்கு மீண்டும் நன்றி ஏன் என்னா என்னோட பழைய ஞாபகம் ஒன்றையும் கிளறிவிட்டது... அதைப்பற்றித்தான் இந்த பதிவு....

நான் அப்போழுது இலங்கையில் இருந்த நேரம்... இலங்கையில் படித்த ஒரு சாதாரண மாணவன் 3 பெரும் பரிட்சைகளை முகம் கொடுத்தாகவேண்டும். முதலாவது 5ம் ஆண்டில் ஒரு பரிட்சை இது 5ம் ஆண்டு புலமைப்பரிசில் எனப்படும். 2வது 11ம் ஆண்டு முடிவில் G.C.E Ordinary level எனப்படுகிற கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பரிட்சை, இந்த பரிட்சை செய்து இதில் சித்தி அடைந்தால் மட்டுமே G.C.E Advance Level எனப்படுகிற உயர்கல்விப்பொதுத்தராதரம் எனப்படுகிற அடுத்த நிலைக்கு அனுமதிக்கப்படுவர் அதன் பின் கல்விபொதுத்தராதர உயர்தரப்பரிட்சையில் சித்தி அடைந்து உயர் பெறுபேறு எடுத்தால் மட்டுமே பல்கலைகழக அனுமதி கிடைக்கும். அப்படிக்கிடைக்காதவர்கள் என்னைப்போல் வெளிநாட்டில் வந்துதான் பல்கலைக்கழகத்தில் படித்தாகவேண்டும். அதில் சிலர் போதிய பெறுபேறு பெற்றவர்களாகவும் இருக்கலாம் அல்லது அதி உயர் பெறுபேறு பெற்றவர்களாகவும் இருக்கலாம். இலங்கை மாணவர்கள் அநேகர் வெளிநாடுகளில் வந்து இளங்கலைப்பட்டப்படிப்பு கற்பதற்கும் இதுவே காரணம். இனி கதைக்கு வருவோம்


அப்படி நான் G.C.E A/L ஆரம்பித்து கொஞ்ச நாளின்பின்தான் "பாபா" எனப்படுகிற தலைவர் ரஜினியின் அழியாக்காவியம் வெளிவந்தது. "படையப்பா" வெற்றிக்குப்பின் வெளிவர்ர ரஜினியின் படம் சரியாக 3 ஆண்டுகள் இடைவெளியின் பின் வெளிவரும் படம் அதனால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதனால ஒரு 15 முதல் 20 நண்பர்கள் சேர்ந்து படம் பார்க்க school cut அடித்து படத்துக்கு போக முடிவெடுத்தோம்... ticket கிடைக்குமா என்கிற சந்தேகத்தில் முதல் நாள் இரவு ஒரு 12, 1 மணிபோல போய் வரிசையில நிக்கிற இடத்தில ஒரு பாயைப்போட்டு அதில ஒரு மனிதன் படுத்திருப்பதுபோல் தயார்செய்து வைத்துவிட்டு வந்திட்டோம். அடுத்தநாள் காலை எதுக்கும் என்று 10.30 காட்சிக்கு ஒரு 8 மணிக்கே எல்லோரும் போய் வரிசையில நிற்க ஆரம்பித்தோம் பார்த்தால் 9 மணிவரைக்கும் எங்கள் கூட்ட்த்தைதவிர ஒரு ஈ,காக்காவைக்கூட காணவில்லை... அட தியட்டர்க்காரனே 9 மணிபோலதான் வந்தான்.... பின் கொஞ்சம் கொஞ்சமா கூட்டம் வர ஆரம்பித்தது.... அப்பத்தான் எங்களைப்போல எவ்வளவுபேர் வேலைவெட்டி இல்லாம இருக்கனுங்க எங்கிறதே புரிந்தது.... சரி வந்திட்டனுங்க என்னு அவனுங்களையும் ஜோதில சேர்த்துக்கிட்டோம். நாங்க பண்ணின அலப்பரை பஸ்ஸில போறவங்க எல்லாம் ஜன்னலால எட்டிப்பார்த்து ஏதாவது கட்சிக்கூட்டமா என்னு பார்க்கிற அளவுக்கு இருந்தது.


தியட்டர்க்காரனும் எவ்வளவு நேரம்தான் பொறுமை இருப்பான்... சரி வராம ஒரு ஒரு 10 மணி போல பொலிஸ்காரர்களை கூப்பிட்டான்.... பொலிஸகாரர்களும் வந்து இறங்க அனைவரும் கப்சிப் அவ்வளவு பேரும் அமைதியானோம்.... வந்து இறங்கின பொலிஸ் அப்படியே பேசாம வெளியவே இருந்திருந்தால் இந்த பதிவு எழுதவேண்டிய அவசியமே வந்து இருக்காது.வந்தவங்க நேரா தியட்டர் உள்ளவே போனார்கள். அட இவனுங்க ஒன்னும் செய்ய மாட்டானுங்க எங்கிற ஒரு தைரியத்தில மீண்டும் கத்த ஆரம்பித்தோம். சரியா 10.15க்கு எனக்கு அப்போதான் ராகு காலம் ஆரம்பித்தது என்னு நினைக்கிறேன். சனி வந்து நாக்கில குடியிருந்த நேரமும் அதுவாகத்தான் இருக்க வேண்டும். சும்மா இருக்க முடியாம எல்லோரும் அமைதியான நேரம் நான் பலமா "பாபாவுக்கு ஒரு ஓப்போடு" என்று கத்த அங்க இருந்து வந்த பொலிஸ்காரன் நேர என்கிட்டவே வந்து விட்டன் ஒரு அடி சும்மா கிண் என்னு ஒரு 10 பிரியாணி ஒன்னா சாப்பிட்ட மாதிரியே இருந்திச்சு...  அதுக்கு பிறகுதான் மத்தவங்கள கவனிக்க ஆரம்பிச்சான். அதில ஒருத்தன் செருப்ப எடுக்க போக அவன அடிக்க வந்த பொலிஸிட்ட வீர வசனம் பேச அவனுக்கு அடி.... இப்படியெல்லாம் அடிவாங்கி கடைசியா படத்த பார்த்துவெறுத்துப்போய் வெளிய வந்தோம்

வந்த நேரம் எங்க கூட்டத்தில இருந்த ஒருத்தன்கிட்ட போய் தெரியாத்தனமா "படம் எப்படி இருந்திச்சு மச்சி??" என்னு கேட்டுட்ட்டேன்... அதுக்கு அவன் சொன்னான் ஒரு பதில் பாருங்க அதுதான் வாழ்க்கையில எனக்கு மறக்க முடியாதது... என்ன பதில் என்னு கேக்குறீங்களா??

"படம் சூப்பர் மச்சி...படையப்பாவ விட நல்லா இருந்திச்சு..... "

எப்படி இருந்திருக்கும் எனக்கு???

Monday, October 20, 2008

உயிர் வாழ வழி தேடி

வன்னியில் வாழ்வா சாவா என வாழ்க்கைக்கே போராடிக்கொண்டிருக்கும் எங்கள் மக்களுக்காய் நாம் தான் என்ன செய்யமுடியும்? ஆனாலும் எங்கள் நாட்டு மக்கள் இப்படியே அழிவதை பார்த்துக்கொண்டிருக்க போகிறோமா?

ஓர் ஈழத்தமிழனாய் என் இதயமும் ........

Friday, October 17, 2008

சினிமாத்தொடர்

தெரியாத்தனமா என்னை இந்த தொடருக்கு அழைத்த வீரத்தளபதி அகில உலக நாயகன் J.K.ரித்தீஷ் ரசிகர் மன்றத்தலைவி ராப் அவர்களுக்கு நன்றி

1 - அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

in 1956 சே சே நான் முதல் சினிமா பார்த்தது நான் நினைக்கிற மாதிரிக்கு 1987ல நான் முதல்முதல்ல பார்த்த படம் M.G.Rன் "ரிகஷா மாமா" என்னு நினைக்குறேன்...


1 - ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா

நினைவு தெரிஞ்சு பார்த்த படம் எது என்னு கூட எனக்கு ஞாபகம் இல்ல... ஹி  ஹி ஹி என்ன செய்ய என் ஞாபகசக்தி அப்படி....

1 - இ. என்ன உணர்ந்தீர்கள்?

ஞாபகமே இல்ல எங்குறேன் இதில என்ன உணர இருக்குது??

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

ஆஹா அந்த ஞாபகப்படுத்திர மாதிரி இப்படியெல்லாம் கேள்வி கேட்டா நான் அழுதிடுவேன்.... ஆமா அப்படி என்ன படம் என்னு கேக்குறீங்களா?? வேற என்ன "குருவி"தான் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

அதுவும் கொடுமைதான் வேற என்ன "துரை, துரை" என்னு அர்ஜுன் நடிச்ச படம்தான் என்ன செய்ய என் நிலைமை அப்படி....


4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

ஆங் அதுவா நம்ம தலைவரோட "பாபா" வேற ஒன்னும் இல்லைங்க "பாபா" படம் பார்க்க போன போது தலைவர் படமாச்சே என்னு சொல்லி முதல் showக்கேஒரு 20 பசங்க சேர்ந்து போய் பார்த்தோம்... 10.30 மணிக்கு showக்கு 8 மணிக்கே போய் லைன்ல நின்னுட்டோம்... கொஞ்சம் கொஞ்சமா கூட்டம் சேர  கொஞ்சம் கொஞ்சமா உற்சாகம் அதிகமாகி  நானும் ஒரு 10 மணி போல வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியாம "பாபாவுக்கு ஒரு ஓ போடு" என்னு கத்த பசங்களும் "ஓ" கத்தி வைச்சானுங்க.... அதுவரைக்கும் சும்மா இருந்த போலிஸ்காரன் அதுக்கு மேலயும் சும்மா இருக்க முடியாம வந்து எனக்கு விட்டான் பாருங்க ஒரு அடி அதுதான் என்னைத்தாக்கிய தமிழ்சினிமா


5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?

அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைங்க.... அரசியலுக்கும் எனக்கு சம்பந்தமே இல்லைங்க...

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

அபூர்வசகோதரர்கள்தான்...வேற ஒன்னுமே ஞாபகமே வரலிங்க என்ன செய்ய ஹி ஹி ஹி

6-தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

ஆங் நிறைய வாசிக்கிறதுண்டு... தமிழ்சினிமா.com, tamil.cinesouth.com,thatstamil.com அப்பறம் விகடன் அவ்வளவுதான்

7. தமிழ்ச்சினிமா இசை?

அது கேட்க நல்லாத்தாங்க இருக்குது... ஆனா என்ன செய்ய முக்காவாசிப்பேர் வேற மொழிகளில் இருந்துதான் சுட்டு போடுறாங்க... அதப்பற்றி முதல்லயே ஒரு பதிவு போட்டிருக்கேன், இங்க பாருங்க


8. அ. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?

ஆங் பார்க்கிறதுண்டு... தெலுகு படம் பார்ப்பேன்... ஆங்கிலப்படம் பார்ப்பேன்.... இருந்திட்டு இருந்திட்டு பதிவுலகத்தில நல்லா இருக்கு என்னு சொல்லுற வேற்று மொழிப்படங்களும் பார்ப்பதுண்டு...

8. ஆ. அதிகம் தாக்கிய படங்கள்?

city of god, பொம்மரிலு,My Sassy Girl, oldboy, தாரே ஸமீன் பர் இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

ஆஹா அப்படி எல்லாம் ஒரு சம்பந்தமும் இல்ல...


10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அதுக்கு என்ன நல்லாதான் இருக்கும்... இப்ப எல்லாம் அனேகமானவர்கள் யார் நடிகர்கள் என்னு பார்த்து படம் பார்க்கிறத விட்டு இப்பல்லாம் யார் டைரக்ட்ர் என்னு பார்த்து படம் பார்க்கிறாங்க... அதோட "பாலா, அமீர், சசி, வெற்றிமாறன், கெளதம் மேனன்" என்னு பலபேர் இருக்காங்க தமிழ்சினிமாவ காப்பாத்த...



11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழன் திருந்திடுவான் என்னு நினைச்சா தப்பு... மறுபடியும் பக்கத்துவீட்டு சமாச்சாரம், மற்றும் வேற் பல கிசு கிசுல மூழ்கிடுவான். அப்படி பேசுறதில நானும் இருப்பேன்... அதாவது நானும் பேசிக்கிட்டு இருப்பேன் ஹி ஹி ஹி

நான் இதைத் தொடர அழைப்பது,
யாரைங்க அழைக்க பில்கேட்ஸ்யோ இல்ல, புஸ்ஸையோ அழைக்கலாம் என்னா அவங்களுக்கு தமிழ் தெரியாதே. அதனால

சரவண குமார் MSK
புனிதா கைலாஷ்
கிரி
திவ்யா
வருண் இல்லாட்டி கயல்விழி
தயா

அவ்வளவுதாங்க

Thursday, October 16, 2008

ஒரு புகைப்பிடிப்பாளனின் வயிற்றெரிச்சல் இது....

இவனே தம் அடிக்கிற மொள்ளமாரி இவனுக்கென்ன feelings என்னு பாக்குறீங்களா?? என்னங்க செய்ய என் நிலமை அப்படி....



இவ்வளவு நாள் நான் உண்டு என் Dunhill blue உண்டு என்று நிம்மதியா இருந்தேன்.... கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு friend ஒருத்தி கிடைச்சா... ஏதோ ஒரு தடவை தம் அடிக்கிற் நேரம் அவ phoneல "என்ன செய்யுறா" என்னு யதார்த்தமா கேக்க நானும் தெரியாத்தனமா "தம்மடிச்சுகிட்டு இருக்கிறேன்" என்னு சொல்லிட்டேன்... அன்னையில இருந்து "நீ ஒரு தமிழ் பொண்ண தம் அடிக்க வைக்க பாக்கிறா... அதனால தம்மடிக்கிறத நிறுத்தீடு இல்லன்னா நானும் ஆரம்பிச்சிடுவேன்" என்னு சொல்லி மிரட்ட ஆரம்பிச்சா...



வேற வழி இல்லாம நானும் சரி வர்ர October 12 அன்னைக்கு தம்மடிக்கிறத நிறுத்துறேன் என்னு சொல்லிட்டேன்... அது என்ன October 12th என்ன நல்ல நாளா என்னு கேக்குறீங்களா?? வேற ஒன்னும் இல்லைங்க என் அப்பாவோட பிறந்த நாள் அதுதான்... நாங்கல்லாம் யாரு வேலுநாயக்கர் மாதிரியாக்கும்... கொடுத்த வாக்க மீற மாட்டமாக்கும் அதனால வேற வழி இல்லாம October 12 வரைக்கு கொஞ்சம் கொஞ்சமா தம்மடிக்கிறத குறைச்சு குறைச்சு ஒரு மாதிரி October 12 அன்னைக்கு முழுசா நிறுத்தீட்டேன்... அதனால இனி யாருமே எனக்கு முன்னாடி தம்மடிச்சோ இல்ல என்கிட்ட தம்ம பத்தி பேசியோ என் வயித்தெரிச்சல கொட்டிகொள்ளக்கூடாது என்பதை 2 தம்மடிச்சு முடிச்ச சந்தோஷத்தோட சொல்லிக்கொள்கிறேன் அம்புட்டுத்தான்..

Monday, October 13, 2008

முதலிரவு 16+

கொஞ்ச நாளா நான் பதிவே எழுதல... இப்படியே விட்டா போன மாதம் மாதிரி வெறும் 3 பதிவோட போயிடும் அதனால என் நண்பன் ஒருத்தன் எழுதின கவிதை எடுத்து சுட்டு போட்டிடலாம் என்னு முடிவு செஞ்சு இன்னைக்கு பதிவேற்றுகிறேன்... அதாவது அவன் கவிதையை சுட்டு இங்க போடுறேன்



முதலிரவு என்றதால்
நெஞ்சில் படபடப்பு;
கொஞ்சம் பரபரப்பு.


எத்தனையோ பாதிநாட்களை
படுக்கையில் கழித்த எனக்கு,
அன்று ஏனோ
அரை அவுன்ஸ் ஏக்கம்
மனதில் மகுடி வாசித்தது.


விளக்கணைத்து -இருளின்
விரல் பிடித்து ஏதோ
போருக்கு போவது போல
போர்வைக்குள் போனேன்.


சாய்ந்த மாத்திரத்திலேயே
காதுக்குள் அவள் சொன்ன
சிருங்கார மொழியும்
சிக்கன சிணுங்கலும்
புரியாமல் தலையசைத்தேன்.


ஓயாத அவள் பசிக்கு
ஓவ்வாத ஜென்மமாக
சுருண்டு விட்டேன்.


ஆனால்,
அவளோ விடவில்லை.


போர்வைக்குள் நீச்சலடித்தேன்;
கைகளோ படபடத்தன;
கால்களோ துடிதுடித்தன;
என் கை நகங்களே
என்னை பிராண்டின.


முடிந்தளவு போராட்டம்
விடிய விடிய நடந்தது.


போரின் உச்சத்தில்
போர்வையே கிழிந்தும்விட்டது.


காலையில் பார்த்தபோது
ஓரத்தில் சிறு ரத்தக்கறை.


என்னவிரசமான வர்ணனையா?


வெளிநாடொன்றில்,
நான் கழித்த முதலிரவில்,
எனையழித்த *நுளம்பின் தொல்லையை
இதற்கு மேல் எப்படி சொல்ல?


-தெய்வீகன்-


*நுளம்பு=கொசு=mosquito

Sunday, October 5, 2008

ஹே வந்திடுச்சு வந்திடுச்சு வந்திடுச்சு

ஆஹா இன்னைக்குத்தான் பிறவிப்பலனை அடைந்தமாதிரி இருக்குது... கடைசீல என் பதிவும் தமிழ்மணத்தின் சூடான இடுகையில வந்திடுச்சு.... ஹி ஹி ஹி ஹி


அதுக்குத்தான் இந்த மொக்கைஸ் வேற ஒண்ணும் இல்ல ஹி ஹி ஹி ஹி ஹி... அது சரி இந்த பதிவ எப்படி வகைப்படுத்திறது?? நக்கல் நையாண்டியா...?? பதிவர் வட்டமா?? பொதுவானவையா?? இல்ல அறிவியல் நுட்பம் அப்படி ஏதாவதா??

Saturday, October 4, 2008

A.R.ரஹ்மான் copy அடித்தால் சரியா??

வணக்கம் நண்பர்களே....

இசைத்துறையில் பாடல்களை காப்பி அடிப்பது என்பது சகஜமாகிவிட்டது... நேற்று இந்த வார தமிழ்மண நட்ச்சத்திரம் அலெக்ஸ்சாண்டர் மனோகரன் அவர்கள் எழுதிய காதலில் விழுந்தேன் - "உனக்கென நான்" ஒரு டப்பிங் பாடல் எங்கிற பதிவைப்பார்த்தவுடன் இந்த பதிவு எழுதவேண்டும் என்று தோன்றியது.

அனைவருக்கும் தெரிந்தவரை "தேவா"தான் பாடல் டியூங்களை காப்பி அடிப்பதில் மன்னன். ஆசை படத்தில் இருக்கும் "புல்வெளி புல்வெளி தன்னில்" என்னும் பாட்டிடலிருந்து பஞ்சதந்திரம் படத்தில் இருக்கும் "மேரே ஜான்" பாடல்வரை ஏராளமான பாடல்களைச்சொல்லலாம்...

அடுத்து நம் இளையராஜாவின் புத்திரன் அவர் பெயருக்கு கொஞ்சம் களங்கம் வரும்படி செய்தவர் என்றுகூட சொல்லலாம்.... அவர் அடித்த காப்பி கீழே யூடியூபில் பாருங்கள்

பாலா படத்தில் உள்ள "தீண்டித்தீண்டி" பாடல் Rimjhim rimjhim எங்கிற படத்தின் காப்பி இப்படி பல பாடல்கள் காப்பி அடித்திருக்கிறார் இது ஒரு சின்ன உதாரணம் அவ்வளவுதான்....

அடுத்து நான் சொல்ல வருவது நம்ம A.R.ரஹ்மான் அடிச்ச காப்பி பற்றி முதல்ல Hello Mr. எதிர்க்கட்சி என்னும் பாடல் Memphis Stomp என்னும் ஒரு ஆங்கில பாடலின் தழுவல்... அண்மையில் வெளிவந்த சக்கரைக்கட்டி படத்தில் உள்ள Taxi Taxi பாடலும் DADDY YANKEEயின் GASOLINA என்னும் பாடலின் தழுவல் என்பதாக தெரிகிறது... கீழே சக்கரைக்கட்டி பாடலையும் DADDY YANKEEயின் GASOLINA பாடலையும் யூடியூபில் இருந்து எடுத்து போட்டிருக்கிறேன் நீங்களே கேட்டுப்பாருங்கள்... கேட்டுப்பார்த்திட்டு சொல்லுங்கள்

முதல் சக்கரைக்கட்டி பாடல்


அடுத்து DADDY YANKEEயின் GASOLINA


விஜய் அன்டனி காப்பி அடிச்சா தப்பு... A.R.ரஹ்மான் copy அடித்தால் சரியா??

Sunday, September 28, 2008

Freeway ஒரு திகில் அனுவம்

வணக்கம் வலையுலகமே...

கொஞ்ச நாளா இந்த flight தள்ளுற வேலையால என்னால பதிவே போட முடியல... அதனால நீங்களும் கொஞ்ச நாள் நிம்மதியா இருந்திருப்பீங்க... ஆனா என்ன செய்ய இன்னைக்கு உங்களுக்கு கெட்ட காலம் திரும்ப ஆரம்பிக்கிறது, ஏன்னா இன்னைக்கு ஒரு இந்த பதிவ போடுறேன் இல்ல அதுதான்...

அதாவது கொஞ்ச நாளா நானும் வேலைக்கு போறது... பிறகு Uni போறது என்னு கொஞ்சம் Busyஆ இருந்திட்டேன்... அன்னைக்கு ஒரு புதன்கிழமை நானும் Uni முடிஞ்சு அடுத்த நாள் Uni எனக்கு இல்லை எங்கிறதால Night shift வேலைக்கு போயிட்டேன்... அன்னைக்கு ராத்திரி ஒரு 10 மணி இருக்கும் என் நண்பன் ஒருத்தன் ரொம்ப நல்லவன்... அவன் சாக போறத்ன்னாலும் என்னையும் இழுத்துக்கிட்டு சாக போவான் அவ்வளவு நல்லவன்... போன் பண்ணி "டேய் அண்ணன் ஒருத்தருககு லைசன்ஸ் எடுக்கனும் நம்ம ஏரியா லைசன்ஸ் ஆபிஸ்ல November வரைக்கும் appointments இல்ல. அதனால நானும் அவரும் பக்கத்தில இருக்கிற(அங்க போக ஒரு 3 மணி நேரம் எடுக்கும் அது அவனுக்கு பக்கத்தில) Geelong வரைக்கும் போய் test எடுக்கலாம் என்னு இருக்கோம் நீயும் வாரியா எங்களுக்கும் பொழுது போன மாதிரி இருக்கும்" என்னான். அட நம்மலையும் ஒருத்தன் மதிச்சு கூப்பிடுறானே... என்கிறதாலயும் Geelong பார்க்கனும் எங்கிற ஆசையிலயும் நானும் கேட்க்காம கொள்ளாம சரி வாரேன் என்னுட்டேன்... காலையில வேலை முடிஞ்சு  வீட்டுக்கு வந்து நானும் போக போறத பற்றி நண்பி ஒருத்திக்கிட்ட சொன்ன போது அவ வேணாம் வேணாம்... அப்பவாவது நான் கேட்டு இருக்கனும்... கேக்கலையே "நாங்க எல்லாம் வேலு நாயகர் மாதிரி வாக்கு கொடுத்தா கொடுத்ததுதான்" என்னு வீர வசனம் எல்லாம் பேசி அவளே "சரி போய் தொலை" என்னு சொல்லுற அளவுக்கு கொண்டு வந்திட்டேன்....


9 மணிக்கு பசங்க 2 பேரும் வர்ரேன் என்னானுங்க நானும் 9.15 வரக்கு பார்த்துக்கிட்டே இருக்கேன் அவனுங்க வர்ர மாதிரி தெரியல... என்னடா என்னு போன் செஞ்சு பார்த்தா நாரப்பயலுங்க அப்பத்தான் எழுந்தானுங்களாம்.... நம்ம த்மிழன்களின் Punctuality அப்படி "ஏண்டா ராத்திரில இருந்து ஒருத்தன் தூங்காம இருந்து இப்போ உங்களுக்காக வர்ரேன் என்னு காத்துக்கிடக்குறான் என்னு கொஞ்சமாவது யோசிச்சீங்களாடா" என்னு கேட்டாப்பிறகு 10 மணிக்கு வந்திடுறோம் என்னானுங்க சரி சரி என்னாப்பிறகு ஒருமாதிரி 10.30க்கு வந்து சேர்ந்தானுங்க... என் கோவம் அறிஞ்சு நல்ல பயலுக ஒரு சிகரட் பெட்டி ஒன்னும் வாங்கி வந்திருந்தானுங்க... சொன்னேன் இல்ல நல்ல பசங்க என்னு... சரி என்னு நாங்க மூனு பேர் நல்லாத்தான் புறப்பட்டோம். போற வழியில சும்மா இருக்கமுடியாம ஊரில உள்ள மத்தவனுங்க பத்தியே புரளி பேசிக்கிடே வந்தோம் தமிழன் இல்லையா அதுதான்... அப்போ freewayல 100km/hல போய்க்கிட்டு இருந்த நேரம் பக்கத்தில கார்ல இருந்த  ஒரு curry aunty (நாங்கள் இங்கே உள்ள இந்திய, இலங்கை மக்களை curries என்றுதான் அழைப்போம்) Lane change செய்வதற்காக சிக்னல் எல்லாம் சரியாத்தான் போட்டாங்க ஆனா என்ன உடனையே திருப்பினதால எங்க கார்ல மோதிற மாதிரி வந்திட்டாங்க எங்க கார் வேற Front weel drive அவங்க கார்ல மோதக்கூடாது என்கிறத்துக்காக கார் ஓடின நண்பன் அதுதான் ரொம்ப நல்லவன் என்னு சொன்னனே அவனேதான் பிரேக் அடிச்சு லைட்டா கார திருப்பினான்... கார் ஒரேடியா ஒரு  90 டிகிரி திரிம்பிச்சுது திரும்பினா அங்க எங்களுக்கு எமன் மாதிரி ஒரு பெரிய container சரி நாங்க சரி இன்னைக்கு என்னு நான் நினக்கிற நேரம் நண்பன் கார திரும்ப மற்றபக்கம் திருப்பினான் கார் அப்படியே ஒரு 180 டிகிரி திரும்பிச்சுது. அப்போ அந்தப்பக்கம் இன்னொரு container சட்னிதாண்டா இவனே நீ எங்கிற மாதிரி நின்னிச்சுது.... அடப்பாவிகளா என்னு நண்பன் மறுபடி கார திருப்பினான் அப்போ கொஞ்சம் திரும்பி  பின்னுக்கு பார்த்தேன்.. அங்க வேற ஒரு container  பிரேக் அடிச்சுக்கிட்டே வந்தான். அந்த நேரத்தில நண்பன் ஒருமாதிரி கார நிறுத்தீட்டான் பார்த்தான் கார் first laneல முன்பகுதி நடுப்பகுதி 2nd laneல பின் பகுதி last laneல திரும்பிப்பார்த்தா பின்னுக்கு வந்த container  வந்துக்கிட்டே இருந்து ஒரு 2 அல்லது 3 மீட்டர் தூரத்தில நிறுத்தீட்டான்... அப்பத்தான் எனக்கு மூச்சே வந்திச்சு.... பக்கத்தில லைசன்ஸ் testக்கு போக இருந்தவனுக்கு மூச்சாவே வந்திடுச்சு உடனே காரை ஓட்டின நண்பன் திரும்ப அந்த curry ladyய துரத்தப்பார்க்க மற்றவன் உடனேயே காரை emergency laneல போட சொல்லி உடனேயே freewayல freeயா போக ஆரம்பித்தான்...


இப்போ சொல்லுங்க மக்களே இது எனக்கு தேவைதான்...  வேலை முடிஞ்சா வலை(அதுதாங்க net, internet நல்ல ரைமிங்கா வருது இல்ல?) இல்லாட்டி தூக்கம் என்னு இருக்காம வாக்கு கொடுத்தேன் அது கொடுத்தேன் இது கொடுத்தேன் என்னு புறப்பட்டேன் பாருங்க என்னை எந்த செருப்பாலங்க அடிக்கிறது??

Tuesday, September 2, 2008

தலைவர்(J.K.ரித்தீஷ்) fight சூப்பர்...

இதுவரைக்கும் எல்லோரும் நக்கலடிச்சுகிட்டு இருந்த எங்கள் தலைவன் வீரத்தளபதி அகில உலக நாயகன் J.K.ரித்தீஷ் நடிச்சு வெளி வந்திருக்கிற நாயகன் படத்தில வர்ர சண்டைக்காட்சிதான் இது.... எப்படி சண்டை பிடிச்சு இருக்காரு பாருங்க எங்க தல. விஜயாவது, ரஜினியாவது, அஜித்தாவது யாருங்க சண்டை பிடிக்க முடியும் எங்க தல மாதிரி நீங்களே பார்த்திட்டு சொல்லுங்க... box officeல 3வது இடத்தில இருக்கிறது எங்கள் தலைவனின் நாயகன் படம் என்பது கொசுறு தகவல்

குழந்தைகள், பெண்கள் மற்றும் இருதய பலவீனம் உள்ளவர்கள் கவனம்


Monday, September 1, 2008

காதலிக்குப்பின் தாய்

 
இருபது வருடம்
வளர்த்த தாயை
பிரிந்தபோது
வாராத கண்ணீர்
மூன்று வருடம் காதலித்து
முற்றத்தில் விட்டவள்
உன்னால்
வருவது மட்டும்
ஏனடி பெண்ணே..?
தாய்க்குப்பின்
தாரமன்றோ
தாய் என்று 
வெறுப்பாள் -எனை
தைரியம் 
கொண்டதனால் இன்று
காதலிக்குப்பின் தாய்

Friday, August 29, 2008

நண்பனுக்காக

கொஞ்சநாட்களுக்கு முன் என்னைப்பிரிந்த என் நண்பன் ராகவனுக்காக மனம்போன போக்கில் எழுதியது.....


தொலைந்து போன நாட்கள்
தொலையாத நினைவுகள்
மரணத்தைத்தேடிக்கொண்டு
வலிகளை எமக்குத்தந்தவனே
மரணம் கண்டு மரத்துப்போன
எங்களையும் கலங்க வைத்தவன் நீ
வளர்த்த பெரியதாயின்
மரணம் கூட கலங்கவைத்ததில்லை
என்னை-கண்ணீர் விட்டழுகிறேன்
உந்தன் பிரிவு கண்டு
ஜீரணம் அடையவில்லையடா-நீ
நேற்று ஊட்டிய உணவுகூட
எப்படி உன் பிரிவு ஜீரணித்து
கொள்ளப்போகிறேன்-கொஞ்சமாவது நினைத்தாயா?
நான் உனக்காக அழுவேன் என்று
எத்தனை சண்டைகள் பிடித்திருப்போம்
நானும் நீயும்
உங்கள் மகனுக்கு நான்
பொறுப்பு-அவன் உங்கள் மகனல்ல
என் நண்பன் என நான் கூறிய
நம் தாய்க்கு என்னடா
பதில் சொல்வேன் நான்...??
நாட்கள் தொலையட்டும்
நம் நினைவுகள் நிலைக்கட்டும்
நானும் இறந்து வருவேன் -ஒருநாள்
உனைக்காண-அன்று சொல்கிறேன்
உன்னால் உடைந்த இதயங்கள்
எத்தனை எத்தனை என்பதை


அதுவரை நினைவுடன்
ஆதவன்

Tuesday, August 26, 2008

ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

வணக்கம் மக்களே.... இவ்வளவு நாள் படிக்கிறேன் படிக்கிறேன் என்று சொல்லி ஊரை ஏமாற்றி உலகை ஏமாற்றி.... அப்பாவ ஏமாத்தி அம்மாவ ஏமாத்தி பொண்ணுங்க பின்னாடி போய்க்கீட்டு ப்லொக் எழுதி அப்பா காசில காலத்த தள்ளிக்கிட்டு இருந்தேன்... இப்படியே போனால் எனக்கு தம் தண்ணி வாங்க கூட கையில காசு இருக்காது எங்கிறது கண நேரத்தில் என் மனதில் தோன்றிய காரணத்தால் வேற வழி இல்லாம வேலை ஒன்றை தேடிக்கொள்ள வேண்டும் எங்கிற எண்ணம் மனதில் தோன்றியது. அதனால ஏதவது ஒரு part-time work தேடிக்கொள்ளுறது எங்கிற முடிவுக்கு வந்து சரி என்னு அதற்கான முயற்சிகளில் இறங்கினேன்... முயற்சியின் முடிவில் ஒரு வேலைக்கு interviewக்கு கூப்பிட்டனுங்க நானும் நமக்கு இருக்க திறமைக்கு microsoftல வேலைக்கு கூப்பிடுவாங்க எங்கிற எண்ணம் இருந்தாலும் இப்போதைக்கு இந்த வேலைய பார்ப்போம் என்னு அந்த interviewக்கு போனேன். வேலையும் கிடைச்சிருச்சு அதுவும் melbourne airportல சரி நமக்கு வேற வழி இல்ல எங்கிறதாலயும் தம்மும் தண்ணியும் கண்ணுக்கு முன்னுக்கு வந்து நின்றதன் காரணத்தாலும் அந்த வேலைக்கு போகலாம் எங்கிற முடிவுக்கு வந்திருக்கேன்...



சரிடா லூசுப்பையலே அதில என்னடா ஆஸ்திரேலியா வர்ரவங்களுக்கு எச்சரிக்கை வேண்டி இருக்கு என்னு கேக்குறீங்களா வேற ஒன்னும் இல்லைங்க என் வேலைக்கு சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு $20000..... அவ்வளவு சம்பளம் தர்ர அளவுக்கு என்னடா வேலை எங்குறீங்களா வேற ஒன்னும் இல்லைங்க melbourne airportல நிக்கிற flightக்கு பிக்கப் பிரச்சனை இருந்திச்சுன்னா நான்தான் flightஅ தள்ளி start பண்ணனும்... மற்றது flight இறங்கிற நேரம் ஏதாவது landing problems இருந்திச்சுன்னா நான்தான் flightஅ பிடிச்சு நிறுத்தனும். தப்பித்தவறியும் flight வானத்தில போகும் போது ஏதாவது எஞ்சின் பிரச்சனை வந்திச்சுன்னா நான்தான் இறங்கி தள்ளி விடனும்... இப்போ சொல்லுங்க இது ஒரு எச்சரிக்கைப்பதிவுதானே?? அதையும் பார்க்க முக்கியமான எச்சரிக்கை நீங்க வந்து ஆஸ்திரேலியா மெல்பொர்னில் இறங்கும் போது முதல்ல பார்க்கும் தமிழ் முகம் நானாக இருக்கவும் சாத்தியங்கள் இருக்கு அதனால நீங்க கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கிறதும் நல்லது... ஏன்னா நீங்க அப்படி என்னைப்பார்த்தா பாக்கிற முதல் முகம் ஒரு நல்ல முகம் இல்ல நொள்ள முகம் ஞாபகம் இருக்கட்டும்... வேலைக்கு நேரமாகுது நான் வர்ட்டா...

Sunday, August 24, 2008

கைபேசி கேட்குதடி


உன் முத்தம்
பெற்றே
விலைமதிப்பற்றுப்போன-என்
கைபேசி கேட்குதடி...
உன் தேன்
முத்தங்களையும்
உன் குயில்
குரலையும்
எப்படிச்சொல்வேன் - என்
காதல் மரித்ததையும்....!! - நீ
காதல் மறந்ததையும்....!!


Monday, August 18, 2008

என் முதல் சிறுகதை முயற்சி

இதுவரைக்கும் உங்க எல்லோரையும் மொக்கை போட்டு கொடுமைப்படுத்தி இருக்குறேன், கவுஜ எழுதி கொடுமைப்படுத்தி இருக்குறேன். இன்னைக்கு கொஞ்சம் கொலைவெறி அதிகமா இருக்கதால சிறுகதை எழுதி கொடுமைப்படுத்த போறேன். வாசிச்சா பிறகு நீங்க உயிரோட இருந்தாலோ இல்ல, உங்க computerஅ உடைக்காம வைச்சிருந்தாலோ பின்னுட்டம் போடுங்க.

ஒரு காதல்கதை

இன்று ஆதி ஆஸ்திரேலியா பறக்கத்தயாராகிறான். ஏற்பாடுகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு விமானநிலையம் நோக்கி பெற்றோர் மற்று சகோதரியுடன் அவந்து அப்பா ஏற்பாடு செய்திருந்த வாகனத்தில் பயணம், அவன் மனமோ அவளின் சிந்தனையில் லயித்திருக்கிறது. அவள் அழகான ரோஜா, எரியாத தீ, பூமியின் தேவதை... "ப்ரியா" அவள் பெயரை அவன் மனம் ஓயாமல் உச்சரிக்கிறது. அவளின் பிரிவு கண்களில் கண்ணீராய் எட்டிப்பார்த்தது அவன் மனமோ கவிதை பாடியது

என்றும்
எனைப்பிரியாய்
என்பதால்-உன்
பெயர் ப்ரியாவோ??

அவன் கண்களில் கண்ணீர் கண்டு தங்கள் மேல் இவனுக்கு இவ்வளவு பாசமா என அவன் குடும்பமும் கண்ணீருடன் அவனை வழி அனுப்பி வைக்கின்றனர்.

விமானத்தினுள்ளே, மேக்கப்பால் அழகாய் சிரிக்கும் விமானபணிப்பெண்கள், அறியா வயதுடனே மகிழ்வாய்க்குதிக்கும் சிறு குழந்தைகள், அவன் தோளில் உலகம் மறந்து உறக்கம் அணைக்கும் காதலி, அவள் கூந்தலின் நறுமணம் இயற்கையானதா செயற்கையானதா என கிறங்கிக்கிடக்கும் காதலன், என்றும் மாறா அன்புடன் இன்றும் அணைத்திருக்கும் உடலில் வயதாய் உள்ளத்தில் இளமையாய் ஒரு காதல் ஜோடி என பலவகை உவகைகள் நிறைந்திருக்க உணர்ச்சியற்ற ஜடமாய் தாய்நாடு பிரிவது, தாயைப்பிரிவது மறந்து காதலி நினைவில ஆதி, ஜன்னலூடே இருளை வெறித்தபடி பழையவைகளை அசை போட ஆரம்பித்தான்.

Smsல் நட்பு புதிதாய் அறிமுகப்படுத்தியது அந்த வார இதழ், நண்பன்தான் இதழின் ஆசிரியன் என்பதால் போட்டுத்தொலைத்தான் ஆதியின் விபரங்களை

Name-Aathi
Sex-Male
Phone # - **********

பெண்களுடன் அதிகம் பழகாத ஆதிக்கு அடுத்தடுத்து பெண்களிடம் இருந்து smsகள் பெரிதாய் எதற்குமே பதிலளிக்காமல் இருந்தவனை கொஞ்சம் ஆட்டித்தான் பார்த்தது அந்த sms


"Hi aathi, this is Priya, Juz saw ur # on paper. Felt like smsing u , wanna be ma friend? -priya-"


ஏதோ ஒன்று அவனை ஈர்க்க நட்பானார்கள் இருவரும், காலம் செல்ல ஆதி காதல் சொன்னான், அவளோ தன் படிப்பு முடிந்தவுடன் மேற்படிப்புக்காய் ஆஸ்திரேலியா செல்லப்போவதாக சொல்ல, தானும் வருவதாய் ஆதியும் சொல்ல காதல் ஆஸ்திரேலியாவினால் உறுதியானது.

படிப்பதாய் பெற்றோருக்கு கொடுத்த வாக்கை மறந்து காதலிக்காய் ஆஸ்திரேலிய வாக்கை காப்பாற்ற தயாரானான் ஆதி. "இப்போதெல்லாம் மகன் இரவெல்லாம் கண்விழித்து படிக்கிறான்" என அம்மா அப்பவிடம் சொன்னதை சுரணை கெட்ட ஜென்மமாய் இரவில் அலைபேசியில் மொழிந்தான் ஆதி. நிலவினாலும் புறாவினாலும் வளர்க்கப்பட்ட புராண காதல்களை விட அலைபேசிகளினால் வளர்க்கும் தன் காதல் உயர்ந்ததென்றான் ஆதி. பள்ளி முடியுமுன்பே யாரும் அறியாவண்ணம் மதிலேறி பாய்ந்து காதலி பள்ளி முன்பு தவம் கிடந்தான். 10 மணிவரை கண்கள் திறக்காதவன் அதிகாலை 4 மணிக்கு முன்பே எழுந்து walking போவதாய் காதலி வீட்டின் முன் கொக்காய் ஒற்றைக்காலில் நின்றான். அவன் பள்ளி வாழ்க்கை முடியும் வேளை நண்பர்கள் பிரிவை மறந்து காதலி எப்போழுதும் பார்க்கலாம் என பறந்தோடித்திரிந்தான்

பள்ளி வாழ்க்கையும் முடிந்தது, அவளுக்கு கொடுத்த வாக்கைக்காப்பற்ற பெற்றோரிடம் மேற்படிப்புக்காய் ஆஸ்திரேலியா போக போவதாய் கூறி ஏற்பாடுகளும் செய்தான். அவளுக்கு அவள் பள்ளியிலே சில பாதுகாப்புக்காய் அவளது பள்ளியில் படிக்கும் தன் நண்பன் பாரத்தை அவளுக்கு அறிமுகப்படுத்து வைத்து அவர்களையும் நண்பர்கள் ஆக்கினான் ஆதி.

"what whould u like to have sir?"

விமானப்பனிப்பெண்ணின் குரல் கேட்டு நினைவுகள் மீண்டும் உலகம் வந்தது.

"no thanks plz"

என்றவாறு வேறு பல நினைவுகளோடு ஆஸ்திரேலியா வந்து சேர்ந்தான். முதல் வேலையாய் part-time வேலை ஒன்றைத்தேடிக்கொண்டு ஆஸ்திரேலிய டாலர்களை அலைபேசியில் வீணடித்தான். ஆஸ்திரேலியாவில் அவனும் அவள் நாட்டில் அவளும் Sms மூலமும் அலைபேசி மூலமும் முத்தங்களையும், கண்ணீரையும், காதலையும் பரிமாறிக்கொண்டனர்

ஆதி ஆஸ்திரேலியா வந்து 6 மாதங்களின் பின் ஒருநாள் அலைபேசியில் அவளைத்தொடர்பு கொள்ள அவள் அலைபேசி off செய்யப்பட்டிருந்தது. Land Lineல் தொடர்பு கொண்டு அவளுடன் பேச முயன்றான். நீண்ட முயற்சியின் பின் அவள் தொலைபேசியில் சொல்கிறாள் " நான் பாரத்தைக்காதலிக்கிறேன். அவரும் என்னைக்காதலிக்கிறார்" இங்கு ஆதியின் இதயம் சுக்குநூறாய் உடையும் சத்தம் பெரிதாய் அவனுக்கு மட்டும் கேட்கிறது சிறிது நேரத்தில் சுக்குநூறான அலைபேசி போலவே

Thursday, August 14, 2008

தீயாக நீ

தீ சுடுமென யாரோ சொல்ல
தீண்டினேன் உனை
தீ சுடுவதோடு
சிலிர்க்கவும் செய்கிறது
நல்லவேளை ஆதிகாலத்தில்
நீயில்லை- தீயின் தன்மை
நிமிடத்துக்கு நிமிடம் மாறுமென
இன்று நான் படித்துக்கொண்டிருப்பேன்

தீயின் தன்மை எரிப்பதாம்
எதனையும் எரிக்காதா தீ-நீ
தீ தீண்டி எரிந்திருப்போர் பலரிருக்க
எரியாமல் நான்
தீயின் மேல் நீர்த்துளிகள்
உன்மேல் பூத்திருக்கும்
வியர்வைத்துளிகள்
பார்வைக்கு கண்கள் மட்டும்தான்
தீயாகத்தெரிகிறது-தீண்டினால்
உடலெங்கும் தீயாய்ச்சுடுகிறது
உள்ளம் உருகிப்போகிறேன்
உன்னைப்பார்க்கும் போதெல்லாம்
நானும் மெழுகுதானோ??

Monday, August 11, 2008

நம்ம தலைவர (J.K.ரித்தீஷ்) ஆடி ஜெயிக்க ஆள் உண்டா??

பாருங்க மக்களே நம்ம தலைவர் ரித்தீஷ் மன்னிக்கவும் J.K.ரித்தீஷ் ஆட்டத்துக்கு முன்னுக்கு யார் இருக்கது?? நாயகன் பட டிரெயிலர் இதுதான் சும்மா கலக்குறார் தலைவர் பாருங்க. J.K.ரித்தீஷ் ரசிகமணிகளே தலைவரின் ஆட்டத்தைப்பாரீர் ஜென்ம சபல்யம் அடைவீர்




நம்ம தலைவர் ஆட்டத்துக்கு முன்னுக்கு விஜய்யாவது சொஜய்யாவது... பாருங்கைய்யா தலைவர் ஜீன்ஸ் கலர எப்படி சும்மா கண்ண கூசுது சா சா எப்படி கண்ண கவருது என்னு... அந்த கண்ணாடி(என்ன பாவம் பண்ணிச்சோ) எப்படி நம்ம தலைவருக்கு பொருந்துது என்னு. என்ன ஒரு டான்ஸ் என்ன ஒரு மூவ்மெண்ட்?? மத்தவங்க இந்த மூவ்மன்ட் செஞ்சா "மூவ்" மூட்டு வலி தைலம் போட வேண்டியதுதான். பாருங்கைய்யா என்ன மாதிரி பாடல் வரிகள் என்னு இந்த பாட்ட சின்ன வயசில படிச்சா பிறகு எல்லோரும் மறந்திருப்போம். நமக்கு அந்த பாட்டை புதிய வடிவில் தந்ததுக்காகவே நம்ம தலைவருக்கு ஒரு சிலை வைக்கலாமய்யா... வாரீர் ரசிக மணிகளே வந்து இன்பம் பெறுவீர்

Saturday, August 9, 2008

பிறந்த நாள் பரிசு

வணக்கம் மக்களே,

கொஞ்ச நாள்ல நம்ம friend ஒருத்தனுக்கு பிறந்த நாள் வருது. இந்த பிறந்த நாளில் நான் அவனுக்கு கொடுக்குற பரிசில அவன் என்னை வாழ்க்கையில மறக்கவே கூடாது எங்கிறத்துக்காக ஏதாவது பரிசு வாங்கனும் என்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்... அவன் மேல லைட்டா கோபமும் இருக்கதால கொஞ்சம் பழிவாங்கிற விதமா சில பரிசுகளை கொடுக்க விரும்பினேன்..... சில ideas வந்திச்சு, இந்த பரிசெல்லாம் கொடுத்தா அவன் என்ன மறப்பானா இல்லையா நீங்களே பார்த்து சொல்லுங்க மக்களே



பரிசு நொ-1 - என் கையாலேயே அவனுக்கு அவன் பிறந்த நாளில் இருந்து ஒரு 10 நாட்களுக்கு சமைச்சு போடனும். என் சமையல் திறமையை அறிந்து கொள்ள இங்கே கிளிக்கவும்



பரிசு நொ-2 - நான் கவிதை எங்கிற பேரில எழுதின சில மொக்கை வரிகளை அவனை ஒரு நாட்காலியில் கட்டிப்போட்டுட்டு வாசித்துக்காட்டுதல். கவிதை சாம்பிளுக்கு இங்கே கிளிக் பண்ணவும்



பரிசு நொ-3 - அவனை நான் ஒரு manual supra carல ஏத்திக்கிட்டு நானே drive பண்ணி எங்கையாவது கொண்டுபோய் சேர்க்கனும். (எனக்கு manual drive பண்ணத்தெரியாது என்கிறது எல்லோருக்கும் தெரிஞ்ச ரகசியமாச்சே. எனக்கு லைசன்ஸ் இல்ல என்கிறத மட்டும் அவன் கிட்ட சொல்லிடாதீங்க)



பரிசு நொ-4 - சாம் அண்டர்சனை சந்திக்க வைத்து அவரிடம் சில dance moves கற்றுக்கொள்ள ஒழுங்கு செய்து தரப்போகிறேன். அவரது dance movesஐ கீழே போய் பார்த்துக்கொள்ளுங்கள்



பரிசு நொ-5 - ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றத்தில் சேர்த்து விடல்... (எனக்காக தலைவி ராப் அனுமதிப்பார் என எதிர்பார்க்கிறேன். மற்ற மன்ற உறுப்பினர்களும் அனுமதிப்பீர்கள் என எதிர் பார்க்கிறேன்) J.K.R பற்றிய மற்ற விபரங்கள் தெரிய வழிப்போக்கனை அணுகவும்



பரிசு நொ-6 - குசேலன் படத்துக்கு டிக்கெட் எடுத்துக்கொடுத்து birthday boy மட்டும் தனியாக இருந்து பார்த்த ஒழுங்கு படுத்திக்கொடுத்தல் (கிரி அதற்கான ஏற்பாடுகளை செய்வார்)




பரிசு நொ-7 - கடைசியாக லாஸ்ட் பட் நொட் லீஸ்ட் ஒரு பெரிய பழிவாங்கல் பரிசாக இளையதளபதி டாக்குத்தர் விஜய் படமான "அழகிய தமிழ்மகன்", "குருவி" தலைவர் ஜே.கே.ரித்திஷின் "காணல் நீர்", சாம் அண்டசனின் படம் மற்றும் விஜய T.Rன் "வீரசாமி" ஆகிய படங்களின் ஒரிஜினல் பட DVDக்களை கொடுத்தல்.
சாம்பிளுக்கு இந்த clip





என்ன மக்களே இன்னைக்கு இந்த மொக்கை போதுமா??

Friday, August 8, 2008

இது ஒரு தன்னிலை விளக்கம்

வணக்கம் வலையுலகமே, சில நாட்களில் என்னுள் ஏற்பட்ட குழப்பம், நண்பர்கள் சிலர் நான் எழுதுவது பற்றி என்னிடம் நேரில் கூறிய சில கருத்துக்கள் என்னை சற்றே பாதித்தமையால் இந்த பதிவு எழுதும் வம்பே வேண்டாம் என ஒதுங்கியே இருந்தேன். இருந்தாலும் அடிக்கடி தமிழ்மணம் வாசல்வரை வந்து பின் திரும்பிச்சொன்றதுமுண்டு. இரண்டு நாட்களுக்கு முன் மூத்த பதிவர் நண்பர் ஒருவருடன் ஜீ talkல் பேசியவேளை அவர் " இப்படி எல்லாம் நான் யோசித்திருந்தால் எப்போதோ நான் நிறுத்தியிருப்பேன்" எனக்கூறிய வேளை நடு மண்டையில் "நொங்" எனக்கொட்டியது போல் இருந்தது.

அதேவேளை இந்தப்பதிவின் மூலம் என் பதிவினை வாசித்து தன் கருத்துக்களைக்கூறிய அந்த நண்பர்களுக்கு என் நன்றியைக்கூறிக்கொண்டு என்னைப்பற்றி சிறு விளக்கமளிக்கவிழைகிறேன்.

நண்பரே, முதலாவதாக நான் உங்களைப்போல் எழுத்துக்களில் தேர்ந்த எழுத்தாளன் கிடையாது, எனக்கு எழுத்து நடை தெரியாது "Practice makes perfect" எனப்படுவது போல் நான் தொடர்ந்து எழுதினால் சற்றே ஒழுங்காக எழுதுவேன் என நினைக்குறேன். நான் எழுதுவது இலங்கைத்தமிழையும் சாராமல் இலங்கைத்தமிழையும் சாராமல் ஆங்காங்கே இந்தியத்தமிழும் இலங்கைத்தமிழும் பரவிக்கிடப்பதாக கூறி இருந்தீரகள். நண்பரே நம் தமிழை எத்தனை பேர் எத்தனை விதமாக பேசுவார்கள் தெரியுமா? இலங்கையிலேயே மட்டக்களப்புத்தமிழ், யாழ்ப்பாணத்தமிழ், கொழும்புத்தமிழ் என பலவிதமான accent எனப்படுகிற பேச்சுவழக்குகள் உண்டு. தமிழ்நாட்டில் சென்னைத்தமிழ், மதுரைத்தமிழ், கோவைத்தமிழ், திருநெல்வேலித்தமிழ் எனப்பல வகை உண்டு. மலேசியாவில் மலேசியத்தமிழ், சிங்கப்பூரில் சிங்கப்பூர்த்தமிழ் இப்படித்தமிழையே எத்தனையோ விதமான பேச்சுவழக்கு உள்ளது, எனக்கு பலதரப்பட்ட பகுதிகளில் இருந்தும் பல நண்பர்கள் உள்ளனர். அவர்கள் என்னுடன் பேசும்போது அவர்களின் தாக்கம் என்னில் பிரதிபலிக்க வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. முக்கியமான ஒன்று நான் என்னை இந்தியத்தமிழன் என்றோ இலங்கைத்தமிழன் என்றோ அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. நான் தமிழன் அவ்வளவே... எனக்குத்தெரியும் நான் உங்களோடு பேசி ஜெயிக்க முடியாது என்பது அதனால்தான் எனது விளக்கத்தை ஒரு பதிவின் மூலமே எழுதியிருக்கிறேன். நீங்கள் என்னிடம் கூறியதை ஒரு பதிவின் மூல வெளிப்படுத்தியது ஒரு அநாகரிகமான செயலாகவோ அல்லது தவறாகவோ உங்களுக்கு தெரிந்தால் அதற்காகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

நான் இந்தப்பதிவில் எழுதியதிலோ அல்லது இதற்கு முந்திய பதிவுகளில் எழுதியதிலோ தவறுகள் இருப்பின் நற்றமிழ் கூறும் எழுத்துலக பிரம்மாக்கள் என்னை மன்னிக்கட்டும்


அன்புடன்
இவன்

Monday, July 28, 2008

ராப் styleலில் ஒரு கவுஜை முயற்சி

வணக்கம் மக்களே நான் கவுஜாயினி ராப் கவுஜைகளை வாசிச்சதில இருந்து எனக்குள்ளயும் கவுஜ எழுதனும் என்னு ஒரு நெருப்பு எரிஞ்சிகிட்டே இருந்திச்சு. நானும் முயற்சி செஞ்சி பார்த்திட்டேன் சரியா வரவே இல்ல. எனக்கு கொஞ்சம் கவிதை எழுதவரும்(அப்படி என்னு சொல்லிக்கிறது) ஆனா எனக்கு கவுஜ எழுத வராது(நீ கவிதை என்னு எழுதிறது எழுதிற எல்லமே கவுஜ மாதிரித்தான் இருக்குது என்னு இந்த பச்ச பிள்ள மனச காயப்படுத்தி அழவைக்கக்கூடாது சொல்லீட்டேன்) அப்படி கவிதை எங்கிற பேரில எழுதின எல்லாத்தையும் என் நண்பர்களை கொடுமைப்படுத்தனும் எங்கிறத்துக்காக hi5 போடுறது உண்டு. நம்ம பசங்களும் அத வாசிச்சிட்டு அவனுங்க லேசா கொலைவெறிப்பிடிச்சுப்போய் அவனுங்க மப்பில இருக்க நேரம் என்னைக்கவிஞர் என்னு சொல்லியும் வைரமுத்து என்னு சொல்லியும் கவிதை சொல்ல சொல்லியும் அவனுங்க மப்புக்கு என்னை ஊறுகாய் அக்குறதும் உண்டு.

இப்படி இருக்கிறப்போ போன சனிக்கிழமை நம்ம பசங்கள்ல ஒருத்தன் ஏதோ பார்ட்டி என்னு சொன்னான், நாமதான் பார்ட்டி என்னா எங்கடா என்னு பார்த்திகிட்டு இருக்கிறவனுங்களாச்சே விடுவமா?? அந்த ஒரு சொல்ல நம்பி நானும் இவனுங்க சூழ்ச்சி தெரியாம புறப்பட்டு போனேன். நான் அங்க போகும் போதே வாசலில வைச்சு ஒருத்தன் வந்து மச்சி சிப்ஸ் முடிஞ்சி போச்சிது போய் வாங்கீட்டு வருவோம் என்னான்.

அட சிப்ஸ் வாங்கி கொடுத்திட்டா நம்மல அவனுங்க மப்புக்கு ஊறுகாய் ஆக்க மாட்டானுங்க என்ன ஒரு நம்பிக்கையில நானும் அவன் கூட போய் சிப்ஸ் வாங்கீட்டு வந்திட்டேன், வாங்கும் போதே ஏதோ ஒன்னு அடிமனசு கதவைத்தட்டி வேகமா என் தொண்டையையும் தாண்டி என் வாய் நோக்கி வந்து என் வாயில நின்னுச்சு என்ன என்னு பார்த்தா அது ஒரு கவுஜ... அடடா எனக்கும் கவுஜ வருமோ என்னு என்ன கவுஜ என்னு பார்த்தா அது இதுதான்





ஒரு சைட் டிஸ்ஸே



சைட் டிஸ் வாங்குகிறதே







அப்படின்னு ஒரு கவுஜ சரி விட்டுத்தொலைப்போம் என்னு அவன் வீட்டுக்கு போனா அவனுங்க ஒரு 10 பேரு கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம எல்லோருமே ஒன்னா சேர்ந்து சொன்னானுங்க "டேய் அதுதான் நீ வாரியே பிறகு ஏன்டா சைட் டிஸ் வாங்கினா" என்னானுங்க அப்பவே எனக்கு தெரிஞ்சு போச்சுது அன்னைக்கு அவனுங்க மப்புக்கு சிப்ஸ் இல்ல நான் தான் சைட் டிஸ் என்னு... சரி இஅவனுங்ககிட்ட இருந்து தப்பலாம் என்னு வேற ஒரு ரூம்க்கு போய் இருப்போம் என்னு புறப்படப்போனா ஒருத்தன் கதவ மூடிட்டு சொன்னான் "டேய் மச்சி நீ ஒரு கவிதை சொன்னத்தான் விடுவோம்" என்னு நானும் என்னத்த சொல்ல என்னு நம்ம ஜெயராஜ் அதுதாங்க கரிஸ் ஜெயராஜ் ஸ்டைலில கன்னத்தில கைய வைச்சு யோசிச்சிக்கிட்டு இருக்கிறப்போ அவனுங்க பேசிகிட்டு இருந்த டாப்பிக் அப்படியே ரஜினி பக்கம் போச்சிது



அதில ஒருத்தன்ரஜினி கறுப்பு, வைரமுத்து கறுப்பு ஏன் எங்க இவனே கறுப்பு அப்படி என்னு சொல்லுறப்போதான் நம்ம ராப் ஸ்டையிலில ஒரு கவுஜ எனக்கு தோனிச்சு அத சொன்னா அவனுங்க விட்டுடுவணுங்க என்ன ஒரு தைரியத்தில நானும் அந்த கவுஜய ரெடி பண்ணீ வைச்சுக்கிட்டேன். அப்போ ஒரு நல்லவன் என்கிட்ட "டேய் இவனை விட்டுட்டமே.... டேய் இவனே இரு கவிதை ஒன்னு சொல்லுடா" என்னான் அடடா இவ்வளவு நல்லவனா இருக்கானே என்னு நானும் என் கவுஜய எடுத்து விட்டேன்.... அந்த கவுஜ இதுதான்









ரஜினி கறுப்பு



நானும் கறுப்பு-கவிதை



கேட்கும் நீ ஒரு பருப்பு






என்னேன் அதோட அவனுங்க அடங்கினவனுங்கதான்... அப்படியே புறப்பட்டு அடுத்த ரூமில போய் இந்த பதிவ எழுத ஆரம்பிச்சேன்.... எப்படி ராப் உங்க கவுஜ லெவலுக்கு இருக்கா??

Thursday, July 24, 2008

விஜய் பற்றி சில,விஜயகாந் styleல் ஒரு புள்ளிவிபரம்

வணக்கம் மக்களே நானும் கொஞ்ச நாளுக்கு இளைய தளபதி டாக்டர் விஜய் பத்தி எழுதாம இருக்கலாம் என்னு பார்க்கிறேன் ஆனா அந்தாள் எனக்கு போன ஜென்மத்தில என்ன பாவம் செஞ்சானோ தெரியல.. அவனப்பத்தியே இன்னைக்கும் பதிவு எழுத வேண்டியதாப்போச்சுது... சரி என்னு ஒரு சின்ன புள்ளி விபரம் நம்ம விஜய் பத்தி நம்ம விஜயகாந் ஸ்டைலில

விஜய் மொத்தம் நடிச்ச படம் 47


அதில ரீமேக் 20 படம்


அதில 5 படம் தெலுகு படம் 5 copy paste


கதை மட்டுமே copy பண்ணினது 8 படம்


பேக்கரி சாரி போக்கிரி அப்படியே ஜெராக்ஸ் copy(இப்படி சொன்னதுக்கு மன்னிப்பு கேட்க வேண்டி வருமோ??)


மலையாளம் ரீமேக் 5 படம்


39 ரீமேக் ஆகி இருக்குது மொத்தமா நடிச்ச 47 படத்தில


வெறும் 8 படம்தான் ஒரிஜினல் scriptடோட வந்திருக்குது அதில 5 படம் சூப்பர் FLOP


அவர்தான் நம்ம இந்தியன் சினிமாவின் ஒரே காப்பிஸ்டார் ,


இதில இவனுக்கு டாக்டர் பட்டம் வேற....


இளைய தலவலி சாரி இளைய தளபதி விஜய்....


மக்களே தமிழ் சினிமாபவ காப்பத்த உங்களாலயும் முடியும் இத அப்படியே நம்ம இளைய தளபதி விஜய் சாரி டாக்டர் விஜய் ஸ்டைலில அப்படியே இத காப்பி பண்ணி ஒரு 1000000 பேருக்கு அனுப்பீடுங்க தமிழ்சினிமா பொளச்சிக்கும் ங்ண்ணா சரிங்களாண்ணா வரட்டுமாங்கண்ணா??


பின்குறிப்பு- இதுவும் ஒரு ரீமேக்தான் இது இங்கிலிசுபிஸில வந்திச்சு அத அப்படியே தமிழ ரீமேக் செஞ்சிட்டேன்... ஹி ஹி ஹி ஹி ஹி
விடுங்க விடுங்க அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

Sunday, July 20, 2008

கவுண்டர் styleல் S.A.சந்திரசேகருடன்

வணக்கம் மக்களே.... நானும் கொஞ்ச நாளுக்கு உங்களை எல்லாம் கொடுமைப்படுத்தாம இருக்கலாம் என்னு பார்த்தா நம்ம வழிப்போக்கன் வந்து பதிவுலக இளவரசன் அது இது என்னு என் முதல் பதிவு பின்னுட்டத்தில போட்டு உசுப்பேத்தி விட்டுட்டாரு, நானும் யோசிச்சு யோசிச்சு பாத்துட்டேன் எதுவுமே தோணல என்னத்த பத்தி எழுத ஒண்ணூமே புரியல.... அப்போத்தான் பார்த்தே நம்ம விகடன்ல நம்ம இளைய தளபதி டாக்டர் விஜய் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கொடுத்த பேட்டிய பார்த்த உடனேயே நம்ம பதிவர் மூளை சும்மா இருக்குமா?? அதுதான் நம்ம கவுண்டமணி styleல அவர் பேட்டிக்கு நம்ம comments சில.... இனி பேட்டிய பார்ப்போமா??

''ஒரு காலத்தில் தொண்டர்களாக இருந்தவர்கள்தான் இன்று தலைவர்களாக இருக்கிறார்கள். இன்று நீங்கள் தொண்டர்களாக இருக்கிறீர்கள். நாளை..!?'' (பாடையாக இருப்பீர்கள்.... ஏண்டா இத்துப்போன மண்டையா டேய் நீங்க நாசமாப்போனது இல்லாம மத்தவங்களையும் நாசமாக்கிறது என்னு இருக்கிறீங்களா?? அவங்களாவது நல்லா இருக்கட்டும் விட்டுத்தொலையுங்கடா ) என நடிகர் விஜய்யின் அப்பாவான இயக்குநர் ஏஸ்.ஏ.சந்திரசேகரன் சின்ன இடைவெளிவிட, புரிந்தும் புரியாத (புரிஞ்சிருந்தா எப்பவோ உங்கள அடிச்சு கொன்னிருப்பானுங்க டேய் டேய் பாவம்டா மக்கள்) ரசிகர்கள் கூட்டம் அரங்கம் அதிரத் தடதடக்கிறது!

தனக்கெனத் தனிக் கொடி உயர்த்தி இருக்கிற விஜய், ''நான் எல்லாருக்கும் பொதுவானவனா இருக்கணும்னு ஆசைப்படுறேன். ஆனாலும், உங்க
வேண்டுகோளுக்கு இணங்க (டேய் தேங்காமூடி மண்டையா உன்னை கொடி அறிமுகப்படுத்த சொல்லி யார்ரா கேட்டது?? நீயெல்லாம் கொடி அறிமுகப்படுத்தி என்ன கொடுமை செய்யப்போற என்னு எல்லோருக்குமே தெரியும்டா மக்களே இந்த கொடுமை எல்லாம் கேக்கமாட்டீங்களா???) இப்போ மன்றக் கொடியை மட்டும் அறிமுகப்படுத்துறேன். மக்களுக்குச் சேவை செய்ய நல்ல எண்ணம் இருந்தாலே போதும்.(இருக்கனுமே , ஏண்டா மண்டையா டேய் நீ சேவை செய்யப்போறியா?? எப்படிடா இந்த டகாலடி வேலையெல்லாம் வருது) அந்த எண்ணம் எனக்கும் என் ரசிகர்களுக்கும் நிறையவே இருக்கு!'' என்று சூசகமாக முடிக்க, படபடக்கிறது விஜய் கொடி!

கோடம்பாக்கம் டு கோட்டை... விஜய் ராக்கெட் ரெடியா?

''என்னதான் நடக்குது?'' என்று எஸ்.ஏ.சந்திரசேகர னிடம் கேட்டால்.. ''விஜய் சார் (அப்படித்தான் சொல் கிறார்!)(ஏண்டா S.A.மண்டையா நீ உன் மகன சார் போட்டு கூப்பிடுற அப்ப உங்க அப்பன் என்ன உன்ன S.A.சார் S.A.சார் என்னா கூப்பீட்டான்?? ஏண்டா மத்தவனுங்களும் இப்படித்தான் கூப்பிடனும் என்னா சொல்லித்தொலைடா ஏண்டா எப்படி சூசகமா சொல்லி எங்கள கொடுமைப்படுத்திற??) 'என் மகன்' என்கிற சின்னப் புள்ளியில் ஆரம்பிச்சு,( மண்டையா அப்படி ஆரம்பிச்சதுதான்டா பிரச்சனையே நீ அப்பவே இப்படி செய்யாம இருந்திருந்தா இந்த இன்னைக்கு இந்த பதிவுக்கு வேலை இல்லையேடா) இன்னிக்கு கோடானுகோடி ரசிகர்களின் தலைவன் என்கிற இடத்துக்கு வந்திருக்கார்.(இந்த நினைப்பு வேற இருக்காடா உனக்கு??) ஒரு நாள் அவர் 'நடிக்கணும்'னு(டேய் அப்பவே எங்களப்பத்தி யோசிச்சிருந்தா எங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்குமாடா மாங்கா மண்டையா??) சொன்னார். அந்த நிமிஷத்தில் இருந்தே நான்தான் அவரை டிசைன் பண்ண ஆரம்பிச்சேன். (தெரியும்டா நீதான் இந்த பிரச்சனைக்கேல்லாம் காரணம் என்னு) எங்க முதல் முயற்சி 'நாளைய தீர்ப்பு' எதிர்பார்த்த வெற்றியைத் தரலை.(மக்கள் கொஞ்சம் தெளிவா இருந்ததாலதான் அப்படி) விஜய் சோர்ந்து போனார். எல்லோருக்கும் விஜய் மேல இருந்த நம்பிக்கை போயிருச்சு.(திரும்ப நடிக்கிறன் எங்கிற பெயரில வந்து இந்தப்பாடு படுத்திறான்) ஆனா, நான் ஒருத்தன் முழு உறுதியோடு இருந்தேன்.(டேய் டேய் முக்கா மண்டையா இதுக்கெல்லாம் முழுக்காரணமும் நீயா) படிப்படியா அவரை மேலே, மேலே கொண்டு வந்தேன். 20 வருஷ உழைப்புக்குப் பிறகு இப்போ எல்லாமே நான் எதிர்பார்த்த திசையில் போகுது.(20 வருஷ உழைப்பால பாரு நாங்க படுற பாட்டா சரிடா மண்டையா நீ அந்த குருவி படம் பாத்தியா அதப்பத்தாபிறகும் நீயே சொல்லு நாங்க என்ன பாடுபடுறோம் என்னு)

இன்னிக்கு, அவர் பின்னாடி திரண்டு வர்ற ரசிகர் களை எப்படி ஒருங்கிணைப்பது என்பதில்தான் என் முழுக் கவனமும் இருக்கு. எங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு(தெரியுதுடா நீ என்ன சொல்ல வர்ரா என்னு) விமர்சனங்கள் பலமாக இருக்கும்னு தெரியும். இந்தியாவில் வக்கீல்கள், டாக்டர்கள், இன்ஜினீயர்கள், வாத்தியார்கள்னு எல்லோரும் அரசியலுக்கு வரலாம். நடிகர்களுக்கு மட்டும் ஏன் விமர்சனம்?''(மொத்தத்தில நீ இதுக்குத்தான் அடிபோடுறா என்னு புரியுதுடா மண்டையா)

''அப்போ விஜய்யின் அடுத்த இலக்கு அரசியல்தானா..?''

''விஜய்யின் இப்போதைய வளர்ச்சி ஒரே நாளில் வந்ததில்லை.(பின்ன கொஞ்ச நாளாவா கொடுமைப்படுத்திறான் அவன்?? அதுவும் அழகிய தமிழ் மகன், குருவி, திருப்பாச்சி என்னு விடாம அடிக்கிறானே... எவ்வளவு அடிச்சாலும் தாங்க நாங்க என்ன வடிவேலு என்னு நினைச்சியாடா) அடுத்த கட்டப் பாய்ச்சலுக்கு இன்னும் அதிகக் கவனம் தேவைப்படுது. கடலில் இறங்குவதற்கு முன் அதன் ஆழத்தை அளந்து தெரிஞ்சுக்கணும்.(டேய் டேய் டுபாக்கூர் மண்டையா அதுக்கு முன்னுக்கு நீச்சல் தெரிஞ்சிருக்கனும்டா வெண்ணை) விஜய்யின் ரசிகர்களுக்கும் ஒரு நீண்ட பயணத்துக்கான ஆயத்தம் தேவைப்படுது.

அவர்களுக்கு அரசியல் உணர்வை இப்போ இருந்தே ஊட்டிப் பக்குவப்படுத்தணும். விஜய் சாரிடம் இருக்கிற சமூக உணர்வுதான் என்னைக் கவர்ந்திருக்கு.(ஏன்டா டேய் குருவி, அழகிய தமிழ்மகன் என்னு படம் பன்னுறது, மத்தது ங்ண்ணா ங்ண்ணா என்னு பேசுறது, நடிப்பு என்ன பேரில ஏதேதோ செய்யுறது எல்லாம் சமூக சேவையாடா) மற்றவர்கள் கஷ்டப்படுவதை அவரால் தாங்கிக்க முடியாது.(டேய் அப்போ முதல்ல படம் பன்னுறத நிறுத்தச்சொல்லுடா அதுதான் எங்களுக்கிருக்கிற பெரிய கஷ்டமே... ஒரு வேளை அதுதான் நடிச்சு கொடுமைப்படுத்த வேணாம் என்னு அரசியலுக்கு அனுப்பிறியா) தன்னை நேசிக்கிற ரசிகர்களுக்கு ஏதாவது செய்யணும்கிற எண்ணம் அவரிடம் இருக்கு.

ஆரம்பத்தில் தடுமாறிக்கொண்டு இருந்த விஜயகாந்த்தை நான்தான் பெரிய அளவில் கொண்டு வந்தேன். விஜயகாந்த்தை வடிவமைத்தவன் சொல்கிறேன்...(டேய் டேய் கொஞ்சம் இரு கொஞ்சம் இரு அந்தக்க்கொடுமைக்கும் காரணம் நீதானாடா.... ஏண்டா டேய் கோழிக்கூட்டு மண்டையா ஏண்டா இப்படி மக்கள தொடர்ந்து கொடுமைப்படுத்தனும் என்னே இருக்கியா??) அதே மாதிரி சினிமாவில் விஜய்யையும் பெரிய அளவுக்குக் கொண்டு வந்திருக்கேன். இனி அடுத்தடுத்த எல்லைகளுக்கான பயணங்களில்தான் எங்கள் முழுக் கவனமும். விஜய்யும் அரசியலுக்கு வருவார்!''(அடங்கொக்கமக்கா நீ இப்படியெல்லாம் plan வைச்சிருப்ப என்னு தெரிஞ்சுதாண்டா மக்கள் அவன் முதல் படத்தையே தோற்க வைச்சாங்க அதுக்கு பிறகு நீங்க ஓட வைச்சதுதான்டா மத்த படம் எல்லாம்)

''விஜய்க்கு அரசியல் பிடிக்குமா..?''

''விஜய் அரசியலைக் கவனிப்பார். இப்போ அவருக்கு இருக்கிறது சமூக அக்கறைதான்.(எதுடா சமூக அக்கறை?? ங்ண்ணா ங்ண்ணா என்னு பேசுறதா?? அப்படி அக்கறை இருக்கவன் நடிக்கவே அவன அனுப்பி இருக்கக்கூடாது) இப்பதான் ரசிகர்களிடம் விதை விதைச்சிருக்கோம். அது சிறு செடியாகி, மரமாகி, காய் காய்க்கணும். பொறுமையாகக் காத்திருந்தவர்கள்தானே அரசியலில் பலன் அடைந்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் நிச்சயம் விஜய் அரசியலுக்கு வருவார். எப்ப வருவார்னு தெரியாது.. (இப்படி ச்சொல்லிச்சொல்லித்தாண்டா ஒருத்தர் இவ்வளவு நாளா ஓட்டிக்கிட்டு இருக்காரு) ஆனா, நிச்சயம் வருவார். அப்படி ஒரு கட்டம் அவர் வாழ்க்கையில் வரும். இதை விஜய் சொல்லலை. நான்தான் சொல்றேன். பெரிய எழுத்தில் போடுங்க. விஜய் அரசியலுக்கு வருவார்!''(டேய் டேய் வேணாம் நாங்க பாவம் இப்படி இன்னொரு கொடுமை செய்யாத சரியா) - நிச்சயமான குரலில் முடிக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.


மக்களே இந்த விஜய் அரசியலுக்கு வர்ரதப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க??

Monday, July 14, 2008

கதவைத்தட்டிய கெட்ட காலம்

வணக்கம் மக்களே... இன்னைக்கு என் கெட்ட காலம் கதவத்தட்டிக்கிட்டே வந்திச்சு. என்னன்னே தெரியல எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது என்னு மட்டும் எனக்கு புரியல... நான் இருக்கது ஆஸ்திரேலியாங்க இங்க ஒரு 3 பசங்க ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கோம். நாங்க 3 பேரும் ஒருத்தனுக்கு ஒருநாள் என்னு turn வைச்சு சமைக்கிறதுண்டு இன்னைக்கு வேற ஒருத்தன்ட turn அவனும் சமைக்கிறேன் என்னு சொல்லீட்டு காலையிலேயே புறப்பட்டு இன்னொரு நண்பன்கூட வெளிய போயிட்டான். நானும் சரி evening வந்து சமைப்பான் என்னு நானும் சமைக்காம இருந்திட்டேன் சமைக்கிறதென்னாலும் நம்மளுக்கு வெந்நீர் வைக்கிறத தவிர வேற ஒன்னும் தெரியாது... அதப்பற்றித்தான் சமையல் குறிப்பு என்னு ஒரு பதிவா ஏற்கனவே ஒரு பதிவா போட்டு இருக்கிறேன். அதனால நானும் அவன் வரும் வரைக்கும் காத்திருக்க ஆரம்பித்தேன். அவனும் சதீஸ் எங்குற மற்ற ஒரு நண்பனும் வந்தானுங்க... வந்து காரை பார்க் செஞ்சிட்டு உள்ள வந்து படம் ஒண்ண போட்டு பார்க்க தொடங்கீட்டனுங்க.. அப்பத்தான் என் கெட்டகாலம் கதவைத்தட்டிக்கிட்டே வந்திச்சு அவன் பேரு சுரேஷ் வந்து அவனும் படம் பார்க்கத்தொடங்கினான்.... நானும் எவ்வளவு நேரம்தான் பசிக்காத மாதிரியே நடிக்கிறது?? இருந்த பசில சதீஷ்கிட்ட நான் சொன்னேன்

மச்சி பசிக்குதுடா வா Mcdonalds போயிட்டு சாப்பிட்டு வருவோம்

என்னேன் அப்பவாவது அடடா பய இன்னும் சாப்பிடலயே இப்பவாவது போய் சமைப்போம் எங்கிற எண்ணம் என் வீட்டு நண்பனுக்கு வரக்கூடதா எங்கிற ஒரு நப்பாசைதான்... அவனும் கண்டுக்கிற மாதிரி இல்ல.... அப்ப சதீஷ் சொன்னான்

மச்சி என்னால drive பண்ண முடியாது அதனால நீயே போயிட்டு வா

என்னான்... எனக்குத்தான் drive பண்ணவே தெரியாதே அப்ப நான் யோசிச்சிகிட்டு இருக்க சுரேஷ் சொன்னான்

மச்சி நான் வேணும் என்னா drive பண்ணுறேன்

என்னு நானும் இவன் என்ன இவ்வளவு பெருந்தன்மையா கேக்குறானே என்னு கொஞ்சம் யோசிச்சிட்டு கேட்டேன்

டேய் நீ இன்னமும் Learner permitலயே இருக்கிற பிறகு எப்படி drive பண்ணுவ என்னேன்

ஏன்னா ஏதோ ஒன்னு அப்பவே என்னை எச்சரிச்சுகிட்டே இருந்திச்சு


அப்போ சதீஷ் சொன்னான்

மச்சி அவன் நல்லா drive பண்ணுவான்டா யோசிக்காத அவன் கூட போயிட்டு வா




என்னான் ஏதோ அவன் தந்த ஒரு நம்பிக்கையும் அந்த Mcdonalds Double Quarter Pounder மேல இருந்த ஆசையும் பசியும் சேர்ந்து சதி பண்ணீரிச்சுது.... நானும் போய் Double Quarter Pounder சாப்பிடுற ஆசையில எழும்பி அவன நம்பி போய் காரில ஏறினேன்... அவன் எங்க வீட்டு compoundல இருந்து காரை எடுக்கும் போதே எனக்கு புரிஞ்சிரிச்சு அவன் எவ்வளவு நல்ல driver என்னு இன்னையோட நான் சரி ஏனுதான் நினைச்சேன்..... அவன் drive பண்ணுற நேரமே எனக்கு பாதி உசுரு போயிடிச்சு.. நானும் சரி பரவாயில்லை Mcdonaldsல யாராவது பொண்ணு இருக்கும் எங்கிற ஒரே ஆசையில அங்க போனா என் turn வரும் வரைக்கும் ஒரு பொண்ணு இருந்திட்டு நான் வந்த உடனேயே shift மாறி ஒரு போண்டா பையன் வர்ரான் அப்பவே எனக்கு இருந்த பசி எல்லாமே பறந்து போயிடுச்சு ஒரு மாதிரி Mcdonalds double quarter pounderர வாங்கிகிட்டு போய் காரில ஏறினா அங்க சுரேஷ் காரை start பண்ணி குதிரை ஓட்டிக்கிட்டு இருக்கான்... அது ஒரு manual car அதில ஒழுங்கா கியர் போடாட்டி கார் குதிரை மாதிரி டொக்கு டொக்கு என்னு அடிக்கும்... எனக்கு பயத்திலயே உயிர் போயிடுச்சு அந்த நேரம் பார்த்தா அழகான பொண்ணூங்க எல்லாம் எங்க காரை கடந்து போகனும்?? எல்லாம் என் விதி சரி விடுங்க. அங்க இருந்து புறப்பட்டு நாங்களும் வீட்டுக்கு வந்தா வர்ர வழில ஒரு ambulance லைட்ட போட்டுகிட்டு வந்தா சுரேஷ் அதப்பார்த்து police என்னு நினைச்சு பயந்து காரை கன்னாபின்னா என்னு ஓட தொடங்கினான் எனக்கு உயிர் பயம் உச்சத்தில இருந்திச்சு... என்னா Learner permitல drive பண்ணி பிடி பட்டா லைசன்ஸ் அவ்வளவுதான்... ஒரு மாதிரி பிறகு எப்படியோ வீட்டுக்கு வந்து சேத்திட்டான்... பாருங்கைய்யா இப்படித்தான் நான் ஒவ்வொருமுறையும் போய் எதிலயாவது மாட்டிக்குவேன்... இன்னைக்கு ஒரு Double Quarter Pounder க்கு ஆசைப்பட்டி உசிர விடப்பார்த்தேன்... மக்களே இனி நீங்க யாராவது drive பண்ண போறேன் என்னு சொன்னா தயவு செய்து லைசன்ஸ் இருக்கா என்னு கேட்டு வாங்கி பாத்திட்டு காரில ஏறுங்க பிறகு என்ன மாதிரி ஒரு Double Quarter Pounderகோ இல்லாட்டி ஒரு Big Macக்கோ ஆசைப்பட்டு உசிர விட்டிடாதிங்க சொல்லீட்டேன்

கவுஜை எழுதும் கவுஜர்கள் மற்றும் கவுஜாயினிகளுக்க

கவிஞர்களே கவிதாயினிகளே நீங்க எத்தனையோ கவிதை எழுதி இருப்பீங்க, ஆனா இப்படி ஒரு பொருள் பொதிந்த ஒரு கவிதை இயற்றி இசை அமைத்து பாடி இருக்கீங்களா?? இனியாவது கத்துக்குங்கப்பா எப்படி பாட்டு எழுதிறது என்னு..... முக்கியமா பாட்டு எழுதிறேன் என்னு சொல்லிக்கிட்டு அலையிற வைரமுத்து, பா.விஜய், வாலி மற்றும் நா.முத்துக்குமார் வேற யாரெல்லாம் இருக்கீங்களோ அவங்க அவ்வளவு பேரும் இனி இந்த மாதிரி பாட்டு எழுத கத்துக்கிங்க.... கவிதை எழுதும் பதிவர்களும் பார்த்து தெரிஞ்சுக்கிங்க



என்ன ஒரு வரி பாருங்க

ஈரமாச்சுன்னா காய வையுங்க
காயாப்போன பழுக்க வையுங்க
கிழிங்சு போனா தச்சுப்பாருங்க
காணம போனா தேடிபாருங்க
கலையில தண்ணி ஊத்தி குளிச்சுக்கோ
வாளிக்குள்ள பைப்பு தண்ணி பிடிச்சுக்கோ
டை கட்டு வேலை செஞ்சு கைகட்ட கூடாது


இப்ப்டி ஒரு பாட்டு யாரலங்க எழுத முடியும்?? சூப்பர் கலக்கல் ஆனா என்னதான் இருந்தாலும் நம்ம கவுஜாயினி ராப் லெவெலுக்கு இல்ல அதன்னால இவங்கள அடுத்த முறை அவங்கள வைச்சு பாட்டு எழுதச்சொல்லனும்... கவிதாயினி ராப் நீங்க எப்போ பாட்டு எழுதப்போறீங்க??

Sunday, July 13, 2008

பீனிக்ஸ்

கவிதை கவிதை என்னு சொல்லுறத கொஞ்சம் எழுதிப்பார்போமே என்னுதான் இந்தப்பதிவு இது கவிதை என்னுதான் நினைக்கிறேன்



படத்தின் மேல் கிளிக்கினால் பெரிதாகும்

Friday, July 11, 2008

நான் படம் பார்த்த கதை

கொஞ்ச நாள் பதிவு எழுதி நம்ம மக்கள மொக்கை போடாம இருக்கலாம் என்னு இருந்தேன்.... ஆனா இன்னைக்குத்தாங்க இந்த விதி இருகில்ல விதி அது எவ்வளவு வலியது என்னு புரிஞ்சுகிட்டேன்.... நம்ம ரிலாக்ஸ் பிளீஸ் கயல்விழி மற்றும் நம்ம எந்தன் வானம் வழிப்போக்கன் வந்து அடுத்த பதிவு எப்போ என்னு கேட்ட போது சரி நாம அனுபவிச்ச கொடுமையை நம்ம மக்கள்கிட்ட சொல்லி ஆறுதல் படலாம் என்னுதான் இந்தப்பதிவு

இன்னைக்கு ரொம்ப போர் அடிக்குது என்னு நம்ம நண்பன் ஒருத்தன் வீட்டுக்கு போவோமே என்னு முடிவு பண்ணி இன்னொருத்தன் கூட கடைக்கு போய் தெரியாத்தனமா ஒரு DVD வேற எடுத்துகிட்டு போனேன்.... நம்ம நண்பன் கூட படம் நல்ல படம்டா என்னு பரிந்துரை வேற.... சரி என்னு படதத எடுத்துகிட்டு போனா பார்ப்பியா இனி இப்படி படம் பார்ப்பியா என்னு என்னை நானே கேட்டு கேட்டு செருப்பால அடிச்சுக்கனும் போல இருந்திச்சு... அவன் வீட்டில போய் அந்த படத்த பார்த்ததன் விளைவுதான் இந்தப்பதிவு.... இன்னைக்கு "வேதா" என்னு ஒரு படம் அருண்குமார் நடிச்சது கடைசியா அருண்குமார் நடிச்சு நான் பார்த்த படம் எதுன்னா ஒரு படத்தில அந்த பொண்ணு முகத்த பார்க்காமலே லவ் பண்ணுவாரே அந்தப்படம்தான்.... (ஞாபகம் வரலயா வழிப்போக்கன் மற்றும் நமக்கல் சிபி) அட நம்ம ரம்பா கூட நடிச்சிருப்பங்களே(இப்போ ஞாபகம் வருமே) "கம்பன் எங்கே எங்கே" பாட்டுக்கூட இருக்கே அந்தப்படம்தாங்க.... அந்தப்படம் ஏதோ கொஞ்சம் நல்லா இருந்ததால(சில பல வருஷங்களுக்கு முன்னுக்கு பார்த்ததால அப்படித்தோணிச்சோ என்னவோ) நம்பி இந்தப்படத்தையும் பாத்தேங்க... சும்மா சொல்லக்கூடாது சும்மா ரத்தம் வர வர ஈவு இரக்கம் இல்லாம கொடுமைப்படுத்தினாங்கைய்யா... யாரவது இந்த படத்தை முழுசா பார்த்தவங்க இருக்காங்களா?? பார்த்து 2ND half சேது ஆகாம இருக்கவங்க வாங்கைய்யா உங்க காலைத்தொட்டு கும்பிடனும்( இன்னேரத்துக்கு கயல்விழி இல்லாட்டி ராப் நாங்க முழுப்படமும் பார்த்திடோம்ம் என்னு arrive ஆகி இருக்கனுமே நல்லா ஞாபகம் இருக்கட்டும் 2ND half சேது effectல இல்லாதவங்க கால்ல விழுவேன்) சர்ரி இனி என்ன நடந்திச்சு என்னு சொல்லுறேன்
அருண் (கயல்விழி இது வருண் இல்ல அருண்) அண்ணனாம் அவருக்கு ஒரு தம்பியாம் தம்பி ரேஸ்ல ஜெயிக்கனும் எங்குறத்துக்காக ரேஸ்ல ஓடுற மத்த எல்லாரையும் தோற்க சொல்லி அருண் கேட்டு எல்லோரு தோத்துப்போறாங்களாம்... இதில யாருய்யா கேணயன் விட்டு கொடுத்த அவங்களா இல்ல படம் பாக்கிற நாங்களா?? கஷ்டபட்டு practice கடைசீல தோத்துப்போறாங்க அந்த athletes அவ்வளவு கேவலமா போச்சு athletes என்னா இல்ல?? சரி திரும்பவும் கதைக்கு வருவோம் அந்த ஊரில பெரிய underground தாதாவாம் அவன் தம்பி college electionல நிற்க, அருண்குமார் தம்பியும் அந்த electionல நிக்கிராறாம்.. அப்போ தாதா தம்பி அருண் தம்பிய மிரட்ட, அருண் போலீஸ் வேஷம் போட்டு அந்த தாதாவ ஏமாத்தி தன் தம்பிய ஜெயிக்க வைக்க, வந்தது போலீஸ் இல்ல தன் தம்பி கூட படிக்கிறவன்ட அண்ணன் என்னு தெரிய வர அந்த வில்லன் ஒரு நடிப்பு நடிப்பாரு பாருங்க நம்ம சிவாஜி வந்து அவர்கிட்ட நடிப்பு கத்துக்கணும் அவ்வளவு கொடுமையா இருக்கும் i mean அப்படி ஒரு நடிப்பு.... சரி சரி அதசரி மன்னிச்சு விடுட்டுடலாம் சிவாஜிய விட நல்லா நடிச்சிருக்கார் இல்ல அதுக்காகவாவது விட்டுடலாம்.... ஆனா அதுக்கு பிறகு ஒரு கொடுமை வந்திச்சே அதுதான் பயங்கரம் ஒரு அப்பாவும் மகளும் அருண் வீட்டுக்கு வந்து அருண்கிட்ட அந்த பொண்ண யாரோ நக்கல் பசங்க நக்கல் பண்ணுறதா சொல்லி அவங்களுக்கு help பண்ண சொல்லி கேட்க அருண் தன் அம்மாக்கிட்ட நல்ல பேர் எடுக்க அவங்களை விரட்டி விட அவங்க திரும்பி போற வழியில அந்த பொண்ண அதே பசங்க நக்கல் பண்ண அப்ப வருவாரு பாருங்க நம்ம ஹீரோ வந்து அடிக்கவும் இல்ல வந்து வேணாம் என்னு சொல்ல அவரைத்தள்ளி விடுவாங்க டேய் டேய் எததனை படத்திலடா இப்படியே எடுப்பீங்க என்னு கொலைவெறிதான் வந்திச்சு கீழே விழுந்த ஹீரோ styleஆ எழும்பி பக்கத்தில சும்மா இருந்த பெஞ்ச வெறும் கையாலேயே அடிச்சு உடைப்பாரு பாருங்க சும்மா சூப்பரா இருக்கும் (யம்மே முடியல) அதுகூட பரவாயில்லை பெஞ்சை உடைச்ச கையோட பக்கத்தில எவனோ வீடு கட்ட வாங்கி வைச்சிருந்த செங்கட்டிய உடைப்பாரு பாருங்க எனக்கு T.Vய உடைக்கலாம் போல இருந்திச்சு friend வீட்டு T.V என்னதால விட்டு வைச்சேன்... அதுக்கு பிறகு அருண் பக்கத்தில இருந்த ஒரு இரும்பு பைப்ப காலால அடிச்சு உடைப்பாரு பாருங்க எனக்கு ஒரு தெலுகு படத்தில ஒரு comedian கையுலயும் காலிலயும் இரும்பு plate வச்சு இதே மாதிரி உடைச்சதுதான் ஞாபகம் வந்திச்சு

இதுக்கு மேலயும் இந்தப்படத்த நான் பார்க்கணுமா என்னு நான் யோசிச்சுகிட்டே நான் திரும்பி பார்த்தா அங்க எனக்கு இது நல்ல படம் என்னு பரிந்துரைச்சானே ஒரு லூசுப்பய அவன் நான் இங்க இவ்வளவு பெரிய ஒரு தண்டனையை அனுபவிக்கிறது தெரியாம நல்லா குறட்டை விட்டு தூங்கிகிட்டு இருந்தான் எனக்கா கொலைவெறி வந்த கடுப்புல எழும்பி போய் அந்த DVDய உடைச்சிட்டுத்தான் வந்து இருந்தேன்.... என்ன மாதிரி இந்த படத்த இன்னோரு மனிஷன் பாத்து சித்திரவதைப்படக்கூடாது பாருங்க அதுதான்..... இந்த புத்தி முதல்லயே இருந்திருக்கனும் எங்குறீங்களா அதுவும் சரிதான்...

Monday, July 7, 2008

5ம் classல் ஒரு லவ் லெட்டர்

நானும் நாலு நாளா யோசிக்கிறேன் யோசிக்கிறேன் sorry மூணு நாளா யோசிக்கிறேன் என்னத்த பத்தி எழுதுறது என்னே தெரியல்ல.... சரி ஏதாவது ரூம் போட்டு யோசிக்கலாம் என்னா அதுக்கும் கையில காசு இல்ல... சரி என்னதான் செய்யலாம் எதைப்பற்றி எழுதலாம் யோசிச்சு வெறுத்துப்போச்சுதுய்யா வெறுத்துப்போச்சு. கடைசீல நம்ம வழிப்போக்கன் நான் எழுதி இருந்த இவனும் ஒரு சூப்பர் ஹீரோதான் பதிவுக்கு போட்டிருந்த ஒரு பின்னுட்டத்தைப்பார்த்த போது அட இதப்பற்றி எழுதலாமே என்னு தோனிச்சு.. சரி என்னு அதப்பத்தி எழுத ஆரம்பிச்சிட்டேன்... மக்களே இதுவும் இவனின் வீர பிரதாபங்களில் ஒன்று... நம்ம வீர வாழ்க்கையில எவ்வளவோ இருக்கு அதில ஒன்னுதான் இன்னைக்கு நான் எழுதப்போறது.... சரி ஆரம்பிப்போமா
அதாவது அப்போ நான் 5ம் class படிச்சுக்கிட்டு இருந்தேன்... (இப்பவரைக்கும் அதுவரைக்கும்தானேடா படிச்சிருக்க என்னு மொக்கைக்கமெடி அடிக்க கூடாது ஆமா) அப்போ நான் படிச்சுக்கிட்டு இருந்தது ஒரு co-education school..... அந்த schoolக்கு என் அப்பாதான் principal, அம்மா அதே schoolல teacher, அப்பவே உங்களுக்கு புரிஞ்சிருக்கனும் இந்த "இவன்" எப்படி திமிரு பிடிச்சு அலைஞ்சிருப்பான் என்னு... அந்த நேரத்திலயே எனக்கு என்னு ஒரு செட் பசஙகங்கள சேர்த்துக்கிட்டு அலைஞ்சவன்தான் இந்த இவன்.... இப்படி இருக்குற நேரம் என் classல இருந்த ஒரு பையன் ஒருத்தன் அவன் எங்க classல படிச்ச ஒரு பொண்ண love பண்ணினான்ங்க... அந்த பொண்ணும் love பண்ணினா, அட ஆமாங்க சத்தியமா love பண்ணினாங்கப்பா.... ஆனா இன்னைக்கு இந்த பதிவ எழுதிறத்துக்கு முன்னுக்கு அவளுக்கு call பண்ணி அந்த பையன் பேர சொல்லி அதப்பற்றி எழுதட்டா என்னு கேட்டபோது அவ அவன் யாரு என்னு கேட்டா... என்ன ஒரு ஞாபக சக்தி... ஞாபகம் வந்தா பிறகு எனக்கு அவகிட்ட இருந்து கொலை மிரட்டல் வேற, இப்போ அந்த பையன் எங்க எப்படி இருக்குறானோ?? சரி அவங்க கதைய இன்னொரு பதிவா போடலாம் என்னு இருக்குறேன்.... சரி அந்த பையன்கிட்ட பேசினியா என்னு கேக்குறிங்களா?? பசங்களோட கடலை போடுற பழக்கம் எல்லாம் நம்மகிட்ட இல்லிங்கண்ணோவ்..... சரி கதைக்கு வாரேன்

இப்படி இவங்க love பண்ணிக்கிட்டு இருக்கிற நேரம். அந்த செட் leader(என்னதான் gang leaderஆ இருந்தாலும் ஏதாவது பிரச்சனை வந்த முதல் ஆள escape ஆகுறது நான்தான் அப்பவே இந்த மாதிரி விஷயத்தில நாங்க எல்லாம் சிங்கய்யா) நான் lover இல்லாம இருக்கிறது என் கெளரவத்தை பாதிக்கிறதா இருந்திச்சு... சரி நாமளும் சும்மா இருக்க முடியாம சொல்லப்போனா அந்த நேரத்தில எல்லாம் லவ் பண்ணினா என்ன செய்வாங்க என்னு கூட தெரியாதுங்க அப்படி அப்பாவி ஆனா சொல்லிக்கீறது ஒரு gang leader என்னு.... இப்படி இருக்கிற நேரம் நம்ம பசங்களும் சும்மா இருக்க முடியாம அவனுங்களும் நம்மள ஏத்திவிட சரி நானும் யாரையாவது love பண்ணுறது என்னு முடிவு பண்ணி என் உயிர் நண்பர்கள் இருக்கானுங்க இல்ல அதுதானுங்க என்ன உசுப்பேத்தி வேடிக்கை பாத்தாணுங்களே அதே புண்ணியவானுங்கதான் அவனுங்கள கூப்பிட்டு பெரிய பாரதிராஜா மாதிரி என் இனிய நண்பர்க்ளே என்னு ஆரம்பிச்சி யாரை love பண்ணலாம் என்னு ஆலோசனை நடத்திப்பாத்தேன்.... அப்பத்தான் தெரிஞ்சுது நம்ம பசங்கள் எல்லாம் எவ்வளவு நல்லவனுங்கா என்னு... என்ன நடந்துது என்னு கேக்குறீங்களா?? நான் உள்ளதிலேயே அந்த நேரத்தில பாக்கிற மாதிரி இருந்த பொண்ணுங்கள்ல கொஞ்ச பேர செலெக்ட் பண்ணி அவனுங்களுட்ட சொல்ல செலெக்ட் பண்ணின 10 பொண்ணுங்கள்ல மூணே மூணு பொண்ணுங்கதான் மிச்சமா இருந்திச்சு... மத்த 7 பொண்ணுங்களும் ஒவ்வொருத்தனும் மச்சி நான் அவள லவ் பண்ணூறேன் என்னு சொல்லி சொல்லியே வெட்டிக்கிட்டு வந்த கடைசியா 3 பொண்ணுங்க இருந்தாங்க.. யரு என்னு பார்த்தா அவங்களும் நல்ல பொண்ணுங்கதான்..... சரி என்னு அதில ஒருத்திய நான் செலெட் பண்ணிக்கிட்டேன்ல்... (அவ பேரு ஏதாவது இப்போ வைக்கனுமே சரி அனு என்னு வைச்சுக்கலாமா எல்லாம் தசாவதாரம் பண்ணுற வேலை) சரி என்னு அன்னையில இருந்து நான் அனுவ love பண்ணத்தொடங்கினேங்க... இப்படி இருக்கிற நேரம் என் வீட்டுக்கிட்ட இருக்கிற ஒரு பொண்ணு எனக்கு friendஆனா (அவளுக்கு ஒரு பெயர் வைக்கனுமே சரி மேரி என்னு வைச்சிக்கலாம் "சரி, மேரி "ஆஹா என்ன ஒரு ரைமிங் இவன் நீ எங்கயோ போயிட்ட)அவ அறிமுகம் ஆனா பிறகு அவகூடதான் நான் school முடிஞ்சா பிறகு வீட்டுக்கு போனேன்... அவளும் நானும் மட்டும் இல்லிங்க அவ அண்ணனும் எங்க கூட வருவான்.... நாங்களும் பேசிக்கிட்டே போவோம்... இப்படியே ஒவ்வொரு நாளும் போகிற நேரம் ஒரு நான் அந்த பொண்ணு (ஆங் என்ன பேர் வைச்சோம்??) மேரி கேட்டா "டேய் இவனே நீ யாரையாவது லவ் பண்ணுறியா" என்னு நானும் "இல்ல" என்னு சொல்ல அவ "டேய் பொய் சொல்லாத" என்னு சொல்லி "நீ லவ் பண்ணுற என்னு தெரியும் ஆனா யார என்னுதான் தெரியல" என்னு சொல்ல நானும் ஏதோ இதில "நான் யார லவ் பண்ணுறேன் என்னு நீ நினைக்குற" என்னு கேட்க அவளும் நான் முதல்ல filter பண்ணி வச்சிருந்த பொண்ணுங்க மூனு பேர் முதல் எழுத்தையும் சொல்லி யார் என்னு கேட்டா நானும் அந்த பொண்ணு முதல் எழுத்த சொல்ல சரி என்னு போய்ட்டா..... நானும் வீட்டுக்கு போய்ட்டேன்... அடுத்த நாள்.............

அடுத்த நாள் என்ன ஆச்சுதுன்னா நான் school போக அங்க என் மேசையில "i love you இவன்" அது இது என்னு இருந்திடுச்சா எனக்கா பயங்கர கடுப்பு எல்லாத்தையும் கொண்டுபோய் principalகிட்ட கொடுக்கலாம் என்னா அதுதான் என் அப்பாவாச்சே அவரு என்னை அன்பா கவனிப்பாரு என்ன ஒரே பயத்தில vice principalகிட்ட கொண்டு போய் கொடுத்திட்டேன்... பிறகு ஏதோ தைரியத்தில நானும் "i love u அனு" என்னு எழுதி அதக்கொண்டு போய் நான் லவ் பண்ணின அந்த பொண்ணுகிட்ட கொடுக்க அவளுக்க்கு பயங்கரமா கடுப்பாயிடுச்சி... இதைப்போயி எவனோ ஒரு நல்லவன் எங்க அப்பாகிட்டயும் அம்மாகிட்டயும் பத்தி வைக்க... அப்பா என்னை அன்பா கவனிச்சதோட இல்லாம அம்மா இவன் இப்படியே இந்த schoolல படிச்சா schoolல நாசமாக்கீடுவான் என்னு வேற school மாத்தீட்டாங்க... அதுக்கு பிறகு என்னுடய வரலாற்றில் 5ம் class படிக்கும் போது இருந்த அவ்வளவு பேரிலும் இரண்டே 2 பொண்ணுங்க மட்டும் contactல இருக்காங்க..... ஆங் சொல்ல மறந்திட்டேனே நான் அந்த schoolல விட்டு வந்தா பிறகு அந்த schoolல கண்ணடி உடைக்க, மேசை, நாட்காலி உடைக்க ஆளில்லாம அந்த எவ்வளவோ முன்னேறிட்டதா கேள்விப்பட்டேன்... ஆனாலும் ஒரு ஆசை மீண்டும் ஒரு தடவை அந்த schoolக்க்கு போய் பாக்கணும் என்னோடு படிச்ச நண்பர்கள(மேரி உட்பட) ஒரு தடவை பார்க்கனும் என்னு.... அதிலயும் என்ன உசுப்பேத்தி ரணகளப்படுத்தினானுங்களே அவனுங்களையும் ஒரு தடவை மிதிக்கனுய்யா.......

Friday, July 4, 2008

யாஹுவில் தமிழில் chat செய்யலாம்

வணக்கம் வலையுலக மக்களே... என் நண்பர்கள் பலர் யாஹு மெசஞ்சரை உபயோக்கிறார்கள் ஆனாலும் அதில் யுனிகோட் தமிழில் அரட்டை அடிக்க முடியவில்லை என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது.... நானும் வெகு காலமாக முயன்று பார்த்தேன் முடியவில்லை... பின் ஏதோ வலைத்தளத்தில் அது முடியும் என வாசித்தேன் முயன்றும் பார்த்தேன் சரியாக வந்தது. சரி என்று அதனை bookmark செய்தும் வைத்தேன்... பின் எனது கணனியினை format செய்யும்போது அந்த bookmarkகளை save செய்யாமல் அழித்துவிட்டேன்... பின் இன்று ஏதோ நினைவு வர திரும்பவும் அதனை முயன்று பார்த்து சரி வந்துவிட்டது.... தெரிந்ததை நான் மட்டும் வைத்திருந்தால் நல்லதல்ல என்பதால் உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்



முதலில் உங்கள் கணனியில் e-கலப்பை போன்றதொன்றை நிறுவிக்கொள்ளுங்கள்.(நான் உபயோகிப்பது e-கலப்பை. அதற்கு மட்டும்தான் சரி வருகிறதோ தெரியவில்லை அதோடு நான் எனது Operating System XP, vistaவில் வேலை செய்கிறதா என்னவோ தெரியவில்லை) e-கலப்பையை நிறுவியபின் யாஹு மசெஞ்சரில் log in ஆகி அதில் preferenceய் தெரிவு செய்யவும். இப்பொழுது உங்களுக்கு கீழே உள்ளது போன்ற ஒரு புதிய window திறக்கும்..







அதில் appearanceய் தெரிவு செய்யவும் அதில் change font & colors என்பதைத்தெரிவு செய்யவும்.... அப்பொழுது உங்களுக்கு கீழே காட்டப்பட்டிருப்பது போல் ஒரு புதிய window திறக்கும்..





அதில் fontஇல் TSCu_Paranar.ttf என்னும் fontஇனை தெரிவு செய்து okவினை கிளிக் செய்யவும்.... பின் preferanceல் okவினை கிளிக் செய்து சாதாரணமா யாஹூ மெசெஞ்சரில் அரட்டை அடிக்கும்போது யுனிகோடினை தெரிவு செய்து தமிழி டைப்பண்ணினால் கீழே உள்ளது போல் தமிழில் அழகாக வரும்







font தேவையானவர்கள் இங்கே download பண்ணிக்கொள்ளுங்கள்



Wednesday, July 2, 2008

இவனும் ஒரு சூப்பர் ஹீரோதான்

ஒவ்வொரு முறையும் என்ன எழுதிறது என்னு think பண்ணி பண்ணியே இந்த "இவன்" (என்னத்தான் சொன்னேன்) தலை வெடிச்சுடும் போல இருக்கே... சரி இன்னைக்கு என்ன எழுதிறது?? நேத்து ராத்திரியே(ராத்திரி என்னா விடிய காலையில 5 மணி) யோசிச்சிட்டு சரி நம்ம சின்ன வயசில அடிச்ச கூத்தப்பத்தியும் நம்ம வீர வரலாற்றப்பற்றியும் கொசுவர்த்தி சுத்தலாம் என்னு முடிவு பண்ணி தூங்கீட்டேன், காலையில எந்திரிச்சா எந்த கூத்தப்பற்றி எழுதிறது என்னு ஒரே குழப்பம்(1, 2 கூத்தா பண்ணி இருக்கிறோம் ஆயிரக்கணக்கில இல்ல செஞ்சிருக்கோம்). எதப்பத்தி எழுத? 5ம் class படிக்கும் போது ஒரு பொண்ணுகிட்ட love letter கொடுத்தத எழுதுவோமா? இல்ல சீனியர் பையங்களையே ராகிங் செஞ்சத எழுதுவோமா? எதைப்பற்றி எழுதிறது?? சரி என்னு கடைசீல கூரையப்பிரிச்சிக்கிட்டு நடு வீட்டில இறங்கி் supar hero ஆனதப்பற்றி எழுதுவோம் என்று முடிவு செஞ்சாச்சு எழுதவும் ஆரம்பிச்சாச்சு....


நான் சின்ன வயசில பயங்கர வால்... நம்ம வால்பையன் அளவுக்கு இல்லை என்னாலும் ஓரளவுக்கு வால், என் வீடு மட்டுமில்லாம பக்கத்து வீடுகளும் அதகளப்படும்.... அப்போ எனக்கு ஒரு 7 வயசு இருக்கும்... எனக்கு என்னா என்னா சின்ன வயசிலேயே நினைப்புங்க பெரிய இவன் என்னு(அதுதான் என் பேரு இவன்) அது மட்டுமில்லாம பெரிய cricket player brain lara என்னு நினைப்பு காரணம் நானும் கறுப்பு அவரும் கறுப்பு அப்படி ஒரு ஒற்றுமைங்க கலர்ல.... எங்கையாவது எங்க ஏரியாவில cricket விளையாண்டா நிச்சயமா இவன் அங்க இருப்பான் (ball பொறுக்கி போட) அப்படி ஒரு அன்பு cricket மேல... அன்னைக்கு அப்படித்தான் என் வயசு பசங்களோட cricket விளையாட போகலாம் என்னு இருந்தா, இவன் அங்க போய் ஏதாவது வம்பு சண்டை இழுத்திடுவான் இல்லாட்டி எவன் மண்டையாவது உடைச்சிட்டு வந்திடுவான் என்னு அம்மா வீட்டிலேயே இருக்க சொல்லீட்டாங்க...

நமக்குத்தான் கையும் காலும் சும்மா (வழிப்போக்கன் இது தமிழ் சும்மா) இருக்காதே அதனால வீட்டில இருக்கிறவங்கள பார்த்தேன்... யாருமே என்
கூட விளையாட வரமாட்டங்க... என்ன செய்ய என்னு யோசிச்சநேரம் அக்கா வந்தா.... நம்மகிட்ட ஒரு ஆள் மாட்டினா விட மாட்டமே... அக்காவ வீட்டுக்கு முன்னுக்கு cricket விளையாடலாம் வாரியா என்னு கேக்க அக்காவும் சரி என்னா... எப்பவுமே cricket விளையாண்டா நான்தான் 1st batting அது நானே வைச்சிக்கிட்ட rule யாரா இருந்தாலும் பின் பற்றித்தான் ஆகனும்... அன்னைக்கும் அப்படித்தான் நான்தான் முதல் batting ஒழுங்கா அடிச்சிக்கிட்டு இருந்தேன்... அப்போ லாரா மாதிரி அடி பார்ப்போம் என்னு பக்கத்தில பார்த்திக்கிடு இருந்த தங்கச்சி உசுப்பேத்த நாமலும் right hand version lara மாதிரி bat பண்ணத்தொடங்கினேன்... முதல் ballலே அடிச்சேன் பாருங்க அது போய் எதிர்வீட்டு கூரை மேல விழுந்திருச்சு... வேற ball எடுத்து விளையாடலாம் என்னா அம்மா தரமாட்டேன் என்னுட்டாங்க...

சரி இப்போ cricket விளையாடனுமே என்ன செய்ய யோசிச்சு எதிர் வீட்டுக்கு போனா அங்க யாருமே இல்லை சரி கூரைமேல ஏறி நாமே எடுக்கலாம் என்னு சொல்லி மேலே ஏறி மெதுவா மெதுவா போய் ballஅ தொட்டதுதான் அப்படியே கூரைய பிச்சுக்கிட்டு balloda உள்ள போய்ட்டேன் கீழே விழுந்த இடத்தில ஒண்ணுமே இல்ல என்னதால நேர நிலத்திலேயே land ஆகிட்டேன் எனக்கும் ஒரு சேதமும் இல்லை அங்க பொருட்களுக்கும் ஒரு சேதமும் இல்லை சரி இப்போ என்ன செய்ய என்னு யோசிச்சு ஒருதடவை வீட்ட சுத்தி வந்தேன் அப்படியே சமையலறைக்கு போய் என்ன இருக்கு என்னு பாத்திட்டு பிறகு அங்க இருந்த பிஸ்கட்ட எடுத்து கடிச்சுக்கிட்டே(என்ன ஒரு வில்லத்தனம்) மெதுவா வீட்ட சுத்தி சுத்தி வந்தேன்.... அப்பத்தாங்க பார்த்தேன் பின் கதவுக்கு உள்பக்கமா lock போட்டிருந்தாங்க அத அப்படியே திறந்திட்டு வெளியே வந்திட்டேன், வந்து கதவை மூடாம அப்பாகிட்ட போய் சொல்ல, அதுக்கு பிறகு அப்பா வந்து எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு... அவங்க போன நேரம் அவங்க வீட்டு kryய எங்க வீட்டில கொடுத்திட்டு போனதால அத use பண்ணி முன்கதவைத்திறந்து அப்படியே உள்ளுக்கு போய் பின் கதவை மூடி பிறகு கூரையையும் fix பண்ணீட்டு முன்கதவையும் மூடி வச்சிட்டு பிறகு அவங்களுக்கு call பண்ணி சொல்லீட்டார்.... அவரும் என் அப்பாட friend, அவர் கூட படிச்சவர் என்னதால பெருந்தன்மையா சரி பரவயில்லை freeயா விடு என்னு சொல்ல, எனக்கு நிம்மதி அதுக்கு பிறகாவது என் அப்பா பெருந்தனமையா விட்டிருக்கலாம்... வீட்டுக்கு வர்ர எல்லார்கிட்டையுமா இத சொல்லி என்னை அவமானப்படுத்தனும்?? ( மானம் என்கிறது இருந்தாத்தானே அவமானப்படுத்த எங்குறீங்களா?? அதுவும் சரிதான்)