வணக்கம் வலையுலகமே...
கொஞ்ச நாளா இந்த flight தள்ளுற வேலையால என்னால பதிவே போட முடியல... அதனால நீங்களும் கொஞ்ச நாள் நிம்மதியா இருந்திருப்பீங்க... ஆனா என்ன செய்ய இன்னைக்கு உங்களுக்கு கெட்ட காலம் திரும்ப ஆரம்பிக்கிறது, ஏன்னா இன்னைக்கு ஒரு இந்த பதிவ போடுறேன் இல்ல அதுதான்...
அதாவது கொஞ்ச நாளா நானும் வேலைக்கு போறது... பிறகு Uni போறது என்னு கொஞ்சம் Busyஆ இருந்திட்டேன்... அன்னைக்கு ஒரு புதன்கிழமை நானும் Uni முடிஞ்சு அடுத்த நாள் Uni எனக்கு இல்லை எங்கிறதால Night shift வேலைக்கு போயிட்டேன்... அன்னைக்கு ராத்திரி ஒரு 10 மணி இருக்கும் என் நண்பன் ஒருத்தன் ரொம்ப நல்லவன்... அவன் சாக போறத்ன்னாலும் என்னையும் இழுத்துக்கிட்டு சாக போவான் அவ்வளவு நல்லவன்... போன் பண்ணி "டேய் அண்ணன் ஒருத்தருககு லைசன்ஸ் எடுக்கனும் நம்ம ஏரியா லைசன்ஸ் ஆபிஸ்ல November வரைக்கும் appointments இல்ல. அதனால நானும் அவரும் பக்கத்தில இருக்கிற(அங்க போக ஒரு 3 மணி நேரம் எடுக்கும் அது அவனுக்கு பக்கத்தில) Geelong வரைக்கும் போய் test எடுக்கலாம் என்னு இருக்கோம் நீயும் வாரியா எங்களுக்கும் பொழுது போன மாதிரி இருக்கும்" என்னான். அட நம்மலையும் ஒருத்தன் மதிச்சு கூப்பிடுறானே... என்கிறதாலயும் Geelong பார்க்கனும் எங்கிற ஆசையிலயும் நானும் கேட்க்காம கொள்ளாம சரி வாரேன் என்னுட்டேன்... காலையில வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்து நானும் போக போறத பற்றி நண்பி ஒருத்திக்கிட்ட சொன்ன போது அவ வேணாம் வேணாம்... அப்பவாவது நான் கேட்டு இருக்கனும்... கேக்கலையே "நாங்க எல்லாம் வேலு நாயகர் மாதிரி வாக்கு கொடுத்தா கொடுத்ததுதான்" என்னு வீர வசனம் எல்லாம் பேசி அவளே "சரி போய் தொலை" என்னு சொல்லுற அளவுக்கு கொண்டு வந்திட்டேன்....
9 மணிக்கு பசங்க 2 பேரும் வர்ரேன் என்னானுங்க நானும் 9.15 வரக்கு பார்த்துக்கிட்டே இருக்கேன் அவனுங்க வர்ர மாதிரி தெரியல... என்னடா என்னு போன் செஞ்சு பார்த்தா நாரப்பயலுங்க அப்பத்தான் எழுந்தானுங்களாம்.... நம்ம த்மிழன்களின் Punctuality அப்படி "ஏண்டா ராத்திரில இருந்து ஒருத்தன் தூங்காம இருந்து இப்போ உங்களுக்காக வர்ரேன் என்னு காத்துக்கிடக்குறான் என்னு கொஞ்சமாவது யோசிச்சீங்களாடா" என்னு கேட்டாப்பிறகு 10 மணிக்கு வந்திடுறோம் என்னானுங்க சரி சரி என்னாப்பிறகு ஒருமாதிரி 10.30க்கு வந்து சேர்ந்தானுங்க... என் கோவம் அறிஞ்சு நல்ல பயலுக ஒரு சிகரட் பெட்டி ஒன்னும் வாங்கி வந்திருந்தானுங்க... சொன்னேன் இல்ல நல்ல பசங்க என்னு... சரி என்னு நாங்க மூனு பேர் நல்லாத்தான் புறப்பட்டோம். போற வழியில சும்மா இருக்கமுடியாம ஊரில உள்ள மத்தவனுங்க பத்தியே புரளி பேசிக்கிடே வந்தோம் தமிழன் இல்லையா அதுதான்... அப்போ freewayல 100km/hல போய்க்கிட்டு இருந்த நேரம் பக்கத்தில கார்ல இருந்த ஒரு curry aunty (நாங்கள் இங்கே உள்ள இந்திய, இலங்கை மக்களை curries என்றுதான் அழைப்போம்) Lane change செய்வதற்காக சிக்னல் எல்லாம் சரியாத்தான் போட்டாங்க ஆனா என்ன உடனையே திருப்பினதால எங்க கார்ல மோதிற மாதிரி வந்திட்டாங்க எங்க கார் வேற Front weel drive அவங்க கார்ல மோதக்கூடாது என்கிறத்துக்காக கார் ஓடின நண்பன் அதுதான் ரொம்ப நல்லவன் என்னு சொன்னனே அவனேதான் பிரேக் அடிச்சு லைட்டா கார திருப்பினான்... கார் ஒரேடியா ஒரு 90 டிகிரி திரிம்பிச்சுது திரும்பினா அங்க எங்களுக்கு எமன் மாதிரி ஒரு பெரிய container சரி நாங்க சரி இன்னைக்கு என்னு நான் நினக்கிற நேரம் நண்பன் கார திரும்ப மற்றபக்கம் திருப்பினான் கார் அப்படியே ஒரு 180 டிகிரி திரும்பிச்சுது. அப்போ அந்தப்பக்கம் இன்னொரு container சட்னிதாண்டா இவனே நீ எங்கிற மாதிரி நின்னிச்சுது.... அடப்பாவிகளா என்னு நண்பன் மறுபடி கார திருப்பினான் அப்போ கொஞ்சம் திரும்பி பின்னுக்கு பார்த்தேன்.. அங்க வேற ஒரு container பிரேக் அடிச்சுக்கிட்டே வந்தான். அந்த நேரத்தில நண்பன் ஒருமாதிரி கார நிறுத்தீட்டான் பார்த்தான் கார் first laneல முன்பகுதி நடுப்பகுதி 2nd laneல பின் பகுதி last laneல திரும்பிப்பார்த்தா பின்னுக்கு வந்த container வந்துக்கிட்டே இருந்து ஒரு 2 அல்லது 3 மீட்டர் தூரத்தில நிறுத்தீட்டான்... அப்பத்தான் எனக்கு மூச்சே வந்திச்சு.... பக்கத்தில லைசன்ஸ் testக்கு போக இருந்தவனுக்கு மூச்சாவே வந்திடுச்சு உடனே காரை ஓட்டின நண்பன் திரும்ப அந்த curry ladyய துரத்தப்பார்க்க மற்றவன் உடனேயே காரை emergency laneல போட சொல்லி உடனேயே freewayல freeயா போக ஆரம்பித்தான்...
இப்போ சொல்லுங்க மக்களே இது எனக்கு தேவைதான்... வேலை முடிஞ்சா வலை(அதுதாங்க net, internet நல்ல ரைமிங்கா வருது இல்ல?) இல்லாட்டி தூக்கம் என்னு இருக்காம வாக்கு கொடுத்தேன் அது கொடுத்தேன் இது கொடுத்தேன் என்னு புறப்பட்டேன் பாருங்க என்னை எந்த செருப்பாலங்க அடிக்கிறது??