தொலைந்து போன நாட்கள்
தொலையாத நினைவுகள்
மரணத்தைத்தேடிக்கொண்டு
வலிகளை எமக்குத்தந்தவனே
மரணம் கண்டு மரத்துப்போன
எங்களையும் கலங்க வைத்தவன் நீ
வளர்த்த பெரியதாயின்
மரணம் கூட கலங்கவைத்ததில்லை
என்னை-கண்ணீர் விட்டழுகிறேன்
உந்தன் பிரிவு கண்டு
ஜீரணம் அடையவில்லையடா-நீ
நேற்று ஊட்டிய உணவுகூட
எப்படி உன் பிரிவு ஜீரணித்து
கொள்ளப்போகிறேன்-கொஞ்சமாவது நினைத்தாயா?
நான் உனக்காக அழுவேன் என்று
எத்தனை சண்டைகள் பிடித்திருப்போம்
நானும் நீயும்
உங்கள் மகனுக்கு நான்
பொறுப்பு-அவன் உங்கள் மகனல்ல
என் நண்பன் என நான் கூறிய
நம் தாய்க்கு என்னடா
பதில் சொல்வேன் நான்...??
நாட்கள் தொலையட்டும்
நம் நினைவுகள் நிலைக்கட்டும்
நானும் இறந்து வருவேன் -ஒருநாள்
உனைக்காண-அன்று சொல்கிறேன்
உன்னால் உடைந்த இதயங்கள்
எத்தனை எத்தனை என்பதை
அதுவரை நினைவுடன்
ஆதவன்